tamilnadu

img

சிவகங்கை ஆயுதப்படையின் துணை ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது

சிவகங்கை ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வந்த துணை ஆய்வாளர் ஜெயேந்திரனுக்கு மத்திய அரசின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு மத்திய அரசு உத்கிருஷ்ட சேவா பதக் என்ற பதக்கத்தை ஆண்டுதோறும்  அளித்து வருகிறது.

தற்போது, அந்த விருதுக்கு சிவகங்கை காவல்துறையில் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவர் ஆயுதப்படை துணை ஆய்வாளர் ஜெயேந்திரன், மற்றோருவர் திருப்புவம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் துணை ஆய்வாளர் நாகராஜன் ஆகியோருக்கு கிடைத்துள்ளது. விருது பெரும் இரு அதிகாரிகளுக்கும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.