tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி பிச்சாவரத்தில் குடிநீர் ஏற்பாடு

சிதம்பரம், மே 2-கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சுற்றுலா பயணிகள் அவதிப்படுவது குறித்து ‘தீக்கதிரில்’ ஏப். 26 ஆம் தேதி படங்களுடன் பிரசுரிக்கப்பட்டது. இந்த செய்தி சுற்றுலா துறை மற்றும் சுற்றுலா ஊழியர்களுக்கு சுற்றுலா பயணிகள் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்தனர். மேலும் சமூக வலைதளத்திலும் வைரலாகியது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் அமைத்து கொடுக்கப்பட்டது என்றும் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் மையமும் இரண்டு வாரத்திற்குள் அமைக்கப்படும் என்று பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

;