tamilnadu

பாப்பாகுடி ஊராட்சியில் ஊழல்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

சாத்தூர்:

சாத்தூர் ஒன்றியம், பாப்பாகுடி ஊராட்சியில் தனி நபர் கழிப்பறைகள் கட்டியதில்  ஊழல் நடைபெற்றுள்ளது. ஊழலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் ஒன்றியசெயலாளர் எஸ்.சரோஜா வெளியிட்டுள்ள அறிக்கை:- 

சாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பாப்பாகுடி ஊராட்சி. இதில் லட்சுமியாபுரம், இராமசாமியாபுரம், கண்மாய்பட்டிஉள்ளிட்ட கிராமங்களும் அடங்கியுள்ளன.  இராமசாமியாபுரம் கிராமத்தில் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் 14வீடுகளில் கழிப்பறைகள் கட்டியதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, அதற்கான பணமும் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்மந்தப்பட்ட பயனாளிகளின் வீடுகளில் கழிப்பறைகள் கட்டவில்லை. மோசடியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம்,  நடவடிக்கை எடுக்க மறுக்கும் பட்சத்தில்  மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

;