“போர் வேண்டாம் – அமைதி வேண்டும்” சிபிஎம், வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்
கோவை, ஜூன் 1- “போர் வேண்டாம், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் பாலஸ்தீனுக்கு ஆதரவாக மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங் கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. “போர் வேண்டாம், அமைதி வேண்டும்” என்ற முழக்கத்துடன், அமெரிக்காவின் ஆதரவோடு இஸ் ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் படுகொலைகளுக்கு எதிராகவும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நீதி கோரி, இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியத்தில் கையெழுத்து இயக்கத்தில் ஈடு பட்டனர். அன்னூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், வாலிபர் சங்க மாநிலத் தலைவர் கார்த்தி, மாவட்டச் செயலாளர் அர்ஜுன், பொருளாளர் தினேஷ் ஆகியோர் உரையாற்றினர். இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கு கடும் கண் டனம் தெரிவித்த அவர்கள், பாலஸ் தீன மக்களின் உரிமைகளுக்காக வும், அமைதிக்காகவும் உலகளா விய ஒற்றுமை அவசியம் என வலியு றுத்தினர். “பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் நியாயமா னது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கெதிராக உலக இளைஞர்கள் ஒன் றிணைய வேண்டும்,” என கார்த்தி தனது உரையில் குறிப்பிட்டார். சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் வடக்கு மாநகரக் குழு சார் பில் புதிய பேருந்து நிலையத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற் றது. இந்த இயக்கத்திற்கு, சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எ.குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். இதில், சிபிஎம் வடக்கு மாநகர குழு உறுப்பினர்கள், விசிக மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் சையத் மூசா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் இஸ் மாயில், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் வெல்டிங் பாபு, உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.