சுத்திகரிப்பு மையம் அமைக்க வாலிபர் சங்கம் எதிர்ப்பு
திருப்பூர், ஜூன் 19- மாணிக்கபுரம் பகுதியில் சுத்திகரிப்பு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதனன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், வாலிபர் சங்கத்தினர் மாணிக் காபுரம் பகுதியில் கைழுத்து இயக்கம் நடத்தி பெற்ற மனுவை கிளைச் செயலாளர் முருகேஷ் மாவட்ட ஆட்சியரிடம் அளித் தார். இதில் கூறியிருப்பதவாது, மாணிக்கபுரம் கருப்பண்ண சாமி நகர் பகுதிக்கு அருகில் க.ச எண் 51ல் 8.18 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஊராட்சி பகுதியில் உள்ள வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற் றுள்ளது. மேலும் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த் தையில் இந்த நிலம் பூமிதான இயக்கத்தின் கீழ் உள்ள நிலம் எனக் கூறி கிடப்பில் போடப்பட்டது. தற்போது இந்த இடத்தில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு மையம் அமைக்கப் போவதாக கூறப்படுகிறது. அப்படி அமைந்தால் விவசாய விளைநிலங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். நிலத்தடி நீர் பாதிக்கும். எனவே இத்திட் டத்தை இங்கு நிறைவேற்றக் கூடாது. வீடற்ற ஏழை எளிய மக்க ளுக்கு இவ்விடத்தில் வீட்டுமனை வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் வாலிபர் சங்க ஒன்றியப் பொருளாளர் தினகரன், சந்துரு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் துரைசாமி, ஆகியோர் உடன் இருந்த னர்.