90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் துவக்கம்
தருமபுரி, ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் 90 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் வியா ழனன்று துவக்கி வைக்கப்பட்டன. உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு, தரும புரி மாவட்ட நிர்வாகம் சார்பில், தூய்மை இயக்கம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வியாழனன்று தளவாய்அள்ளி, தருமபுரி நகராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தூய்மை இயக்க உறுதிமொழி ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் ஏற்கப்பட்டது. தொடர்ந்து, நல்லம் பள்ளி ஊராட்சி ஒன்றியம், தளவாய்அள்ளியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள், தன் விருப்ப நிதியின் கீழ் தன் னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில், 30 சிறு பாசன வசதிபெறும் ஏரிகள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் 60 ஏரிகள் என மொத்தம் 90 ஏரிகளை தூர்வாரும் பணி கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கேத்தரின் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவ லர் இரா.கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) நிர்மல் ரவி குமார், நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலை அமைக்கும் பணி குறித்து ஆய்வு
நாமக்கல், ஜூன் 6- போதமலை பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வெள்ளியன்று ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றி யம், கீழூர் ஊராட்சிக்குட்பட்ட, கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான போதமலை என்பது கீழூர், மேலூர் மற்றும் கெடமலை ஆகிய மூன்று குக்கிராமங்களை உள்ளடக்கி யது. இங்கு வாழும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கரடு முரடான பாறைகளுடன் கூடிய, ஆபத்தான மலைப்பாதையை பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நபார்டு திட்டத்தின் கீழ் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு போத மலையில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலை அமைக்கும் பணிக்கு கடந்தாண்டு பிப்.18 ஆம் தேதி யன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந் நிலையில், சாலை அமைக்கும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வெள்ளியன்று ஆய்வு செய்தார். அப் பகுதியிலள்ள மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, வசிக் கும் பொதுமக்கள் விபரம், சாலை பணிகள் விபரம் உள் ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.'
என்சிசி பயிற்சி முகாம்: மாணவர்கள் பங்கேற்பு
ஈரோடு, ஜூன் 6 – ஈரோடு, பெருந்துறையில், 15 தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் 10 நாட்கள் நடைபெற்ற தேசிய மாணவர் படை (NCC) பயிற்சி முகா மில், பட்டாலியனுடன் இணைந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை கையாளுதல், மற்றும் போர் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், உடல் நலம் மற்றும் சுகாதாரம், ஆளுமை வளர்ச்சி தொடர்பான சிறப்பு வகுப்புக ளும் நடைபெற்றன. இப்பயிற்சி முகாமின் முக்கிய நோக்கங்களாக, மேற்கு வங்கத்தில் நடைபெறும் இந்திய அளவிலான தேசிய மாணவர் படை இயக்ககத்திற்கு இடையி லான துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட் டிக்கான தமிழக அணியைத் தேர்வு செய்வ தும், மௌலாங்கரில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொள்ளும் கோவை மண்டல அணி மாணவர்களுக்கு சிறப்பு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிப்பதும் இருந்தன. முகாமின் துவக்க விழாவில் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் லால் லெம ரிட்டோ வைணம் தலைமை வகித்தார். முகா மில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லெப்டினன்ட் கர்னல் கோபால் கிருஷ்ணா மற்றும் சுபேதார் மேஜர் கோவிந்தராவ் ஆகியோர் பரிசுகளை வழங் கினர். இந்நிகழ்ச்சியில் கொங்கு பொறியி யல் கல்லூரி முதல்வர் வீ.பாலுசாமி, துணை முதல்வர் ஆர்.பரமேஸ்வரன் மற்றும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மேஜர் பி.எஸ்.ராகவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பூக்கள் விலை உயர்வு
நாமக்கல், ஜூன் 6- பூங்கள் விலை உயர்ந்து காணப்பட்டதால் விவசாயி கள், வியாபாரிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூரிலுள்ள பூக்கள் ஏல சந்தைக்கு ஜேடர்பாளை யம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த வியாபாரி கள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். இந்நிலை யில், வெள்ளியன்று நடை பெற்ற ஏலத்தில் (ஒரு கிலோ) குண்டு மல்லி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.180க்கும், அரளி ரூ.130க்கும், பச்சை முல்லை ரூ.500க்கும், வெள்ளை முல்லை ரூ.400க்கும், ரோஜா ரூ.400க்கும், செவ்வந்தி ரூ.240க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், பன்னீர் ரோஸ் ரூ.180க்கும், ஜாதி மல்லி ரூ.700க்கும், காக்கட்டான் ரூ.500க்கும் ஏலம் போனது. இந்த மாதத்தில் அதிக முகூர்த்த தினங்கள் வருவ தால் பூக்கள் விலை உயர்ந் துள்ளதாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச் சியுடன் தெரிவித்தனர்.