கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி உரிமையாளரிடம் பெண் வாக்குவாதம்
நாமக்கல், ஜூன் 19- ராசிபுரம் அருகே உள்ள பேக்கரியில் கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த தாகக்கூறி, பெண் ஒருவர் கடை உரிமையாள ரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பாய்ச்சல் பகுதி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கிரி யில் ஆறு மாதங்களுக்கு முன்பு, அதேபகுதி யைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது குழந்தை யின் பிறந்த நாளுக்காக 1 கிலோ கேக் வாங்கியுள்ளார். அந்த கேக்கை அவரது குழந்தை வெட்டியபோது, கேக் கெட்டு போயி ருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த கேக்கை எடுத்து சென்று பேக்கிரி உரிமை யாளரை சாப்பிட சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆறு முன் மாதங்க ளுக்கு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை யடுத்து நாமக்கல் மாவட்ட நடமாடும் உணவு பாதுகாப்புத்துறையினர் வியாழனன்று அந்த பேக்கிரியில் ஆய்வு செய்தனர். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தின் கவர் பயன்படுத்தியதாகவும், உணவு பொருட்க ளின் மீதுள்ள கவரின் மீது காலாவதி நாள் குறிப்பிடாமல் உணவு பண்டங்கள் விற் பனைக்கு வைத்திருந்ததற்காக ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தனர்.