நீலகிரியில் இரவு பகலாக காற்றுடன் மழை
உதகை, மே 26– நீலகிரி மாவட்டத்திற்கு ‘ ரெட் அலர்ட்’ அறிவிப்பால் பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் அனைத்து அரசு துறை அலுவலர் களை ஒன்றிணைத்து தீவிரமாக கண் காணித்து வருகிறது. ‘ரெட் அலர்ட்’ அறிவிக்கப்பட்ட 25 ஆம் தேதி மற் றும் 26 ஆம் தேதிகளில் குந்தா, ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதி களில் இரவு பகலாக பலத்த காற்று டன் மழை பெய்து வருகிறது. திங்களன்று காலை, 7:00 மணி நிலவரப்படி அவலாஞ்சி 35 செ.மீ, அப்பர்பவானி 29 செ.மீ, எமரால்டு 18 செ.மீ, கூடலூர் 15 செ.மீ, பந்தலூர் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களிலும் பரவலாக மழை பெய் துள்ளது. நீர் மட்டம் உயர்வு அப்பர்பவானி, அவலாஞ்சி, எம ரால்டு, பைக்காரா உள்ளிட்ட அணை கள் மின் உற்பத்தி மற்றும் கூட்டு குடி நீர் திட்டத்திற்கு முக்கிய அணையாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மேற்கண்ட பகுதிகளில் அதிகபட்சம் மழை பதிவாகி இருப்பதால், நீரோ டைகளில் தண்ணீர் வரத்து அதிக ரித்து, இரண்டு நாட்களில், 10 அடி வரை நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பிற அணைகளிலும் நீர் மட்டம், 5 அடி வரை உயர்ந்துள்ளது. மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு பலத்த காற்றுக்கு கடந்த இரண்டு நாட்களில் பல இடங்களில் மரங்கள் விழுந்தது. ஞாயிறன்று காலை உதகை அருகே உல்லத்தி, புதுமந்து, லவ்டேல் பகுதிகளில் விழுந்த மரத்தை தீயணைப்பு மீட்பு படையி னர் உடனுக்குடன் சம்பவ பகுதிக்கு சென்று ‘பவர் ஷா’ உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின், போக்குவரத்து சீரானது. மேலும், மாவட்டம் முழுவதும் பழமை வாய்ந்த கற்பூர மரங்கள் அபாயகரமான நிலையில் உள்ளது. மழையுடன் பலத்த காற்று வீசுவ தால் மரங்கள் விழும் நிலையில் இருப்பதால் அந்தந்த பகுதி வரு வாய் துறையினர் அபாய மரங்களை அடையாளம் கண்டு அகற்ற வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். மழை பாதிப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவின் பேரில் அந் தந்த பகுதியில் உள்ள வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.