குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவிப்பு
திருப்பூர், மே 26- காளம்பாளையம் பகுதியில் குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று மாநகராட்சி அலுவலர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி குப்பை கழிவுகளை பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இரண்டு பாறைக் குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சனியன்று வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்த னர். மேலும் திங்களன்று குப்பை லாரியை சிறை பிடிக்கப் போவதாகவும், அறிவித்தி ருந்தனர். இந்நிலையில் திங்களன்று குப்பை கொட்டுவதற்கு லாரி வரவில்லை. இதைய டுத்து அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் காளம்பாளையம் கிளைச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் காத் திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் மகேஸ்வரி, சுகாதார அலு வலர் பரமசிவம், மாநகர சுகாதார அலுவலர் முருகானந்தம், உதவி பொறியாளர் பிரபாக ரன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், குப்பை கொட்டுவதை நிறுத்த கால அவகாசம் வேண்டும் என அலுவலர்கள் தரப் பில் தெரிவித்தனர். இனி இப்பகுதியில் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம். மீறி குப்பை கொட்ட லாரி வந்தால் சிறை பிடிப் போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து பாறைக் குழிகளில் லாரிகள் மூலம் மண் கொண்டுவரப்பட்டு கொட்டும் பணி தொடங்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், பிளாஸ்டிக், மருத்துவக் கழிவுகள் உள் ளிட்டவை இப்பகுதியில் கொட்டப்ப டுவதால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நிலத் தடி நீர் மாசடைகிறது. சுவாச கோளாறு உள் ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இத னால் இப்பகுதியில் குப்பை கொட்டக் கூடாது என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மாநக ராட்சி மேயர் துணை மேயர் உள்ளிட்டோரிடம் நேரடியாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சில நாட்களுக்கு குப்பை கொட்டுவதை நிறுத்துவிட்டு, மீண்டும் குப்பை கொட்ட ஆரம்பித்து விடுகின்றனர். சனியன்று கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தோம். திங்களன்று லாரியை சிறை பிடிப்பதாக அறிவித்ததை அடுத்து, குப்பை லாரி இன்று வரவில்லை. இனி குப்பை கொட்ட இப்பகுதிக்கு லாரி வந்தால் உறுதி யாக லாரியை சிறைபிடிப்போம் என தெரி வித்தனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சம்சீர் அகமது, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பி னர் எ.சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பினர் கள், பி.கே.கருப்பசாமி, என்.இளங்கோ, எம்.தன்ராஜ், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மணவாளன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, தலைவர் ரங்கசாமி, பொருளாளர் ஆர். ஆறுமுகம், விதொச ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.