நூறு நாள் வேலை கேட்டு விதொச ஆர்ப்பாட்டம்
சேலம், ஜூன் 12- வேலை அட்டை வைத் துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண் டும், என வலியுறுத்தி விவசா யத் தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறு தியளிப்பு திட்டத்தின் கீழ், வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். முறையான கூலி வழங்க வேண்டும். சம்பளப் பாக்கியை விரைந்து வழங்க வேண்டும். பணியிடங்களில் குடி நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சன்னியாசிபட்டி அக்ரஹாரம் ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் துரைசாமி, மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர், சிபிஎம் தாலுகா செயலாளர் ஏ.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
மாங்காய் விலை வீழச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெரு மாள், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், தலைவர் எம்.குமார், துணைத்தலைவர் கே.என்.மல்லையன், வட்ட நிர்வாகிகள் ஜி.நக்கீரன், பி.முருகன், சிபிஎம் வட்டச் செயலாளர் கார்ல் மார்க்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.