tamilnadu

ஆக.2,3 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா

ஆக.2,3 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா

நாமக்கல், ஜூலை 11- கொல்லிமலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா ஆகஸ்ட் 2 மற் றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளதென, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் வெள்ளியன்று கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா,  சுற்றுலா விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆகிய விழாக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறவுள்ளதை முன் னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன் னேற்பாடு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பேசுகையில், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகை யில், ஆண்டுதோறும் ஆடித்திங்கள் 17  மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் தமி ழக அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா கொல்லிமலையில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதே போல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்கள் அரசின் சார்பில் வல் வில் ஓரி விழா கொல்லிமலையில் உள்ள  வல்வில் ஓரி அரங்கில் கொண்டாடப் படவுள்ளது. இவ்விழாவையொட்டி கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கில்  அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். மேலும், வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி விழா வினை பசுமை திருவிழாவாக மிகச்சிறப் பாக நடத்திட துறை அலுவலர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஈடு பாட்டுடன் மேற்கொண்டு, விழாவினை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிக ளும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். காவல் துறையினர் காரவள்ளியில் சோதனைச்சாவடிகள் அமைத்து கொல் லிமலை மலைப்பாதையில் லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்வதை தடை  செய்திடவும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர் களை அனுமதிக்கக்கூடாது. பிளாஸ் டிக் குடிநீர் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் சோதனை மேற்கொள்ள வேண்டும். மது அருந்தி வாகனங்கள் இயக்குவதை தடை செய்தல் மற்றும் பாதுகாப்பு ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். வனத்துறையினர் கொல்லி மலை மலைப்பாதையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பணிகள், கொல்லிமலை மலைப்பாதை மற்றும்  பிற முக்கிய இடங்களில் மாபெரும் தூய்மைப்பணியினை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் விழா நடை பெறும் 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்து கள் ஏற்பாடு செய்திட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறையினர் கொல்லிமலை பேருந்து நிலையம், அரப்பளீஸ்வரர் கோவில் ஆகிய முக்கியப் பகுதிகளில் விழாவிற்கு வருகை தரும் பொதுமக்க ளுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு  செய்திட வேண்டும். உணவுப்பாது காப்பு துறையினர் கொல்லிமலையில் உள்ள உணவகங்களில் உணவின் தரம்  குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண் டும். சுகாதாரத்துறையினர் காரவள்ளி, அரப்பளீஸ்வரர் கோவில், கொல்லி மலை பேருந்து நிலையம் ஆகிய பகுதி களில் மருத்துவக்குழுவை தயார் நிலை யில் வைத்திட வேண்டும். மலைவாழ் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்று லாத்துறையின் சார்பில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ, மாணவி யர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் வில் வித்தை சங்கத்தின் சார்பில் வில்வித்தை  விளையாட்டு போட்டிகளும் நடத்தப் பட வேண்டும். வல்வில் ஓரி விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப் பாக பணியாற்ற வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங் கள் இணைப்பதிவாளர் க.பா.அரு ளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சி யர் வே.சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மாவட்ட சுற்று லாத்துறை அலுவலர் மு.அபராஜிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.