புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்
சேலம், மே 25- புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும், என சாலை போக்குவரத்து மோட்டார் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. சேலம் மாவட்ட சாலை போக்குவ ரத்து மோட்டார் தொழிலாளர் சங்கத் தின் 9 ஆவது ஆண்டு பேரவை, சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் ஞாயி றன்று, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உதவித்தலை வர் எஸ்.மூர்த்தி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் ஜி.குப்புசாமி துவக்கவுரையாற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர் டி.முரு கேசன், பொருளாளர் ஆர்.மணிகண் டன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் வி.இளங்கோ, ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.உதயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய மோடி அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். 15 ஆண்டுகள் முடிவில் காலாவதியா கும் வாகனங்களுக்கு மாற்றாக, அரசே வங்கி மூலம் புதிய வாகனங்கள் வாங் குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கக்கட்டணம் தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக உயர்த்துவதை கைவிட வேண்டும் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழி லாளர்களுக்கும், அனைத்து பணப் பலன்களையும் வழங்க, உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராக எஸ்.கே. தியாகராஜன், பொதுச்செயலாளராக பி.முருகேசன், பொருளாளராக ஆர்.மணிகண்டன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய் யப்பட்டது. முடிவில், சம்மேளன உத வித்தலைவர் எஸ்.மூர்த்தி நிறைவுரை யாற்றினார்.