tamilnadu

img

அங்கன்வாடி மையத்தை தினசரி திறக்க பழங்குடியினர் கோரிக்கை

அங்கன்வாடி மையத்தை தினசரி திறக்க பழங்குடியினர் கோரிக்கை

கோபி, ஜூன் 11– கோபி அருகே உள்ள கொங் கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கம்பனூர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், தங்கள் குழந் தைகளின் நலன் கருதி, ஒருநாள் விட்டு ஒருநாள் செயல்படும் அங் கன்வாடி மையத்தை நாள்தோறும் திறக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கம்பனூர் பகுதி யில் 70-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள குழந்தைகளின் நலனுக் காக தற்காலிகக் கட்டிடத்தில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குப் பயின்று வரு கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த அங்கன்வாடி மையம் ஒரு நாள் விட்டு ஒருநாளே திறக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மையத்தில் அங்கன்வாடி அமைப் பாளர் மற்றும் உதவியாளர் இல்லா ததால், வேறு மையத்தில் சமைக் கப்பட்ட உணவு 11 மணிக்கு மேல் எடுத்து வரப்பட்டு குழந்தைக ளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கன்வாடி திறக்கப்ப டாத நாட்களில், மலைவாழ் மக்கள் வேலைக்கு செல்லும் இடங் களுக்கு தங்கள் குழந்தைகளை யும் அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதனன்று நேரில் விசாரிக்க செல்கையில், குழந்தை கள் மையம் பூட்டியே கிடந்தது. இதனை புகைப்படமாக எடுத்துக் கொண்டிருந்தபோது, அவசரமாக வந்த அமைப்பாளர் மையத்தைத் திறந்தார். பொதுமக்களின் புகார் குறித்து அவரிடம் கேட்கையில், “நான் கம்பனூர் மற்றும் எருமை குட்டை என 2 மையங்களுக் குச் சென்று வருகிறேன். இங்கு உதவியாளர் இல்லாததால் வேறு மையத்தில் சமைத்த உணவை எடுத்து வருகிறேன், என்றார்.  காலமுறை ஊதியம் இல்லை, அத்துக்கூலி கூட முழுமையாக இல்லை என்கிற நிலையில் அங் கன்வாடி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஒரே அமைப்பாளர் இரண்டு மூன்று மையங்களையும் சேர்த்து பார்க்க வேண்டும் என்கிற பணிச்சுமையும் திணிக்கப்படுகிறது. தங்களுக்கான உரிமை கேட்டு ஆண்டுக்கணக்கில் அங்கன்வாடி ஊழியர்கள் போரா டிக்கொண்டே இருக்கின்றனர். ஆட் சிகள் மாறினாலும், இவர்களின் நிலை மட்டும் மாறவே இல்லை. தமிழ்நாடு அரசு இவர்களின் கோரிக் கையைம் நிறைவேற்ற வேண்டும்.  அதேபோல, கம்பனூர் பகுதி  மலைவாழ் மக்களின் குழந்தைகள் நலன் கருதி, அங்கன்வாடி மையம் தினசரி செயல்படவும், சொந்த கட்டிடம் கட்டி, ஓர் அமைப்பாளர் மற்றும் உதவியாளரை நியமிக்க வும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.