tamilnadu

img

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது

சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் கையெழுத்திடவில்லை

சென்னை, மே 29 - போக்குவரத்து ஊழியர் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப் பந்தம் கையெழுத்தானது. சிஐடியு உள் ளிட்ட 30க்கும் அதிகமான சங்கங்கள் கையெழுத்திடவில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் 15 ஆவது புதிய ஒப்பந்தம் 1.9.2023  தேதி முதல் அமலுக்கு வரவேண்டும்.  தொழிற்சங்கங்களின் போராட்டத் தையடுத்து 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதற்கட்ட பேச்சுவார்த் தையையும், கடந்த பிப்ரவரி 13,14  ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தையையும் நடத்தியது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், மே 27 அன்று  12 மணி நேர உண்ணா நிலை போராட் டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, டிடி எஸ்எஸ் ஆகிய சங்கங்கள் அழைப்பு  விடுத்தன. இதனையடுத்து மே 29 அன்று  ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலை மையில் வியாழனன்று (மே 29) குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத் தில் நடைபெற்றது. துறைச் செயலாளர்  பனீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்து  கழக மேலாண்மை இயக்குநர் பிரபு சங்கர், உள்ளிட்டு 8 போக்குவரத்து கழக மேலான் இயக்குநர்கள், தொழி லாளர் நலத்துறை இணை ஆணையர்,  சிஐடியு, தொமுச உள்ளிட்ட 85  சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து  கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.  இந்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியபின் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான்கு ஆண்டுக்கான 15வது ஊதிய  ஒப்பந்தம், 1.9.2023 முதல் ஊதிய ஒப்பந் தம் அமலாகும். அடிப்படை சம்ப ளத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங் கப்படும். ஆனால் 1.9.2024 முதல் நிலு வைத்தொகை வழங்கப்படும் என்று  தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க  மறுத்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப்  உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள்  கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய் துள்ளோம்.  ஒருவருட நிலுவைத் தொகை இழப்பால் தொழிலாளர்களுக்கு சுமார்  500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. ஓய்வூதியர்களுக்கு நீண்ட கால மாக வழங்கப்படாமல் உள்ள அக விலைப்படியை வழங்க கோரினோம். அதற்கு திருப்திகரமான பதில் தரவில்லை. ஒப்பந்தத்தின் பலன் ஓய்வூ தியர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த 4 ஒப்பந்தகளாக ஓய்வூ தியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். ஓய்வுபெறும் தொழிலாளர்கள் கடந்த 22 மாதங்களாக ஓய்வூக்கால  பணப்பலன்களை பெறாமல்  வெறும்கையொடு செல்கின்றனர். அந்த தொகையை வழங்கு வதற்கான கால நிர்ணயம் செய்ய  கோரினோம். அதற்கு பதிலளிக்க வில்லை; ஒப்பந்தத்தில் சேர்க்க வில்லை.  அரசுத்துறை ஊழியர்களை விட போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்ப ளம் குறைவாக உள்ளது. போக்குவ ரத்து ஊழியர்களில் ஜூனியர்களை விட  சீனியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்யவில்லை. மேலும், பிறத்துறை ஊழியர் களைவிட குறைவாக ஊதியம்  வழங்குவதை சரி செய்ய சிறப்பு ஊதிய மாக 2000 ரூபாய் வழங்க வேண்டும். அதற்கு மேல் 15 சதவீதம் ஊதிய உயர்வு  தர வேண்டும் என்று கோரினோம். இதனை விவாதிக்க கூட அரசு தயாராக இல்லை. இத்தகைய பிரச்சனைகளில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்தத் தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு  செய்துள்ளோம். அடுத்தகட்ட நடவ டிக்கை குறித்து விவாதித்து அறிவிப் போம், என்றார்.