tamilnadu

img

லாரி-கார் மோதி தாய், மகன் பலி  திருமணமான 2 நாளில் சோகம்

கோவை அருகே இன்று காலை லாரி-கார் மோதிய விபத்தில் தாயும், மகனும் பலியாயினர். திருமணமான 2 நாளில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத்(28). இவருக்கும் சுவாதி(24) என்ற பெண்ணுக்கும் திங்களன்று திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதனன்று காலை ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி, தந்தை சவுடையன்(62) மற்றும் தாய் மஞ்சுளா(55) ஆகிய 4 பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே லோடு ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் 4 பேரும் கொண்டனர். அங்கிருந்தவர்கள் ஓடி வந்து காருக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டனர். விபத்தில் ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சவுடையனும் அவரது மருமகள் சுவாதியும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 நாளில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.