tamilnadu

சிறுவனுக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தண்டனை

சிறுவனுக்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் தண்டனை

கோவை, ஜூன் 13- கோவையில் கார் மோதி 12 ஆடுகள் மற்றும் ஒரு வர் பலியான விபத்தில், காரை ஓட்டிச் சென்ற சிறு வனுக்கு ஒரு மாதம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும்  பணியில் ஈடுபட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் ஒருவர் ஆடு வளர்ப்பு பணிக்கான பட்டி போட்டு இருந்தார். அங்கு வேலை செய்து வந்த ரவி உட்பட இரண்டு பேர் அந்த பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த் துக் கொண்டு காளப்பட்டி சாலையில் சென்றனர். அப் பொழுது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று ஆடுகளின் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில், ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ரவி படுகாயமடைந்து மருத்து வமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே 12 ஆடுகள் பலியானது. இது  குறித்து கோவை மாநகர கிழக்கு பிரிவு காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காரை ஓட்டிச் சென்றது 17 வயது சிறுவன் என்ப தும், தெரிய வந்தது. ஆடுகள் பலியானதும் பயந்து  போன சிறுவன் காரை நிறுத்தாமல் சென்று விட்டது  தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத் தில் ஒப்படைத்தனர். நீதிபதி அந்த சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க உத்தரவிட்டதுடன், ஒரு மாதம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த உத்தரவிட் டார். இதையடுத்து அந்த சிறுவன் கோவை மாநகரப் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் போக் குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகி றார். அத்துடன் இந்த சம்பவத்தில் சிறுவனை கார் ஓட்ட அனுமதித்த அவனுடைய உறவினர் மற்றும் அந்த காரின் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான இரண்டு பேரையும் காவல் துறை யினர் தேடி வருகின்றனர்.