உடல்நலக்குறைவால் புலி உயிரிழப்பு
உதகை, மே 31- உதகை அருகே பைக் காரா நீர்வீழ்ச்சி பகுதியில் உடல்நலக்குறைவால் புலி ஒன்று உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம், பைக் காரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகில் உள்ள நடுவட்டம் காப்புக்காடு பகுதியில் சுமார் 8 வயது ஆண் புலி ஒன்று உடல் நலக்குறைவால் இறந்திருப்பதை ரோந்து பணி மேற்கொண்டிருந்த வனத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் முன்னிலையில் பாதிக்கப்பட்ட புலியை வன கால் நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது புலி உடல் நலக்குறைவால் இறந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இறந்த ஆண் புலியின் உடலை சனியன்று பிரேத பரிசோதனை செய்த பின் அப்பகுதியில் வனத்துறையினர் எரியூட்டினர். ஆண் புலி ஒன்று உடல் நலக்குறைவால் இறந்தது வன ஆர்வலர்களிடையே கடும் சோகத்தை ஏற்ப டுத்தியுள்ளது.
4 ஆண்டுகளில் 59 ஆயிரம் தொழில் முனைவோர்கள் உருவாக்கம்
சேலம், மே 31- கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில், 59 ஆயிரம் தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, சேலத்தில் நடை பெற்ற நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித் துள்ளார். பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்பு தள வாடங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 2,350 பட்டு விவசாயிக ளுக்கு ரூ.31.56 கோடி மதிப்பில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் ஆகி யோர் வழங்கினர். இதன்பின் அமைச்சர் அன்பரசன் பேசுகை யில், தீபாவளிக்கு முன்பாக ரூ.59 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். அதி முக ஆட்சியில் 3,500 பேருக்கு வழங்கப்பட்ட மல்பரி மானி யம், திமுக ஆட்சியில் 6,500 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 800 விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பு மனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 1,500 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டு வளா்ப்பு மானியம் ரூ.87 ஆயிரத்திலிருந்து ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், பவர் டில்லார் பட்டு வளர்ப்பு மனை, மல்பரி மானியம் என 29,704 பேருக்கு ரூ.108.34 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் (2021) 1,834 மெட்ரிக் டன் வெண்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 2,723 டன் ஆக அதிகரித்துள்ளது. 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் 59 ஆயிரம் புதிய தொழில் முனைவோரை உருவாக்கியுள் ளோம். பட்டு வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணி யிடங்கள் விரைவில் படிப்படியாக நிரப்பப்படும், என்றார். இவ்விழாவில், பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி, மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.'
தூர்வாரப்படாத கிணற்றால் அவதி
நாமக்கல், மே 31- நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி, 30 ஆவது வார்டுக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொதுக்கிணறு கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக உள்ளது. இவ்வூ ரில் மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் இதர விசே ஷங்களுக்கு ஊர் பொது கிணற்றை பயன்படுத்து வதை வழக்கமாக கொண் டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே கிணற்றில் புதர் மண்டி, மரம், செடிகள் முளைத்திருப்ப தால் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பயன்படுத்து வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதனைக் கண்டித்து, போராட்டம் நடை பெறும் என அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி யினர் அறிவித்துள்ளனர்.'
சீரமைக்கப்படாத சாலை: பொதுமக்கள் மறியல்
கோவை, மே 31- சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூ ராட்சிக்குட்பட்ட நாகையன் தோட்டம் செல் லும் சாலை கடந்த ஐந்தாண்டுகளாக சீர மைக்கப்படாமல் பழுதடைந்துள்ளதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இத னையடுத்து, போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கலைத்த னர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கண் ணம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட நாகை யன் தோட்டம் செல்லும் சாலை ஐந்து ஆண்டு களாக தார் சாலை செப்பனிடப்படாமல் பழுத டைந்துள்ளதால், மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், ஆம்பு லன்ஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் அப்பகு திக்கு வர முடியாமலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, அவசர மருத்துவத் தேவைக்கு குழந்தைகள் மற்றும் முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும், பள்ளி செல்லும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதிலும் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். சாலையை சீரமைக்கக்கோரி வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சனியன்று காலை 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற் றும் குழந்தைகள் சாலையில் நாற்று நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதம டைந்து மழைநீர் தேங்கியிருந்த சாலையில் நாற்று நட்டு தங்களது எதிர்ப்பை வெளிப் படுத்தினர். இதைத்தொடர்ந்து, திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் காவல்துறை யினரும், வட்டாட்சியரும் போராட்டக்காரர் களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்காலிகமாக சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகத் திடம் பேசி ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார். இதனையடுத்து, பொதுமக்கள் அங்கு கலைந்து சென்றனர்.