கோவையில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை அடிவாரம் ரெப்ரஸ்சி காலனி அமர் ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பவர் சிவமுருகன் ( 45) , இவருக்கு வைரமணி என்ற மனைவி (40), யுவஸ்ரீ (21), ஹேமலதா (19) ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த 2008 ம் ஆண்டு முதல் கோவையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
சிவமுருகன் பால் வியாபாரம் செய்து வந்ததாகவும் கொரோனா ஊரடங்கு பின்னர் தன் தொழிலை தொடர்ந்து செய்து செய்ய முடியாமல் தன் வேலையை விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அதிகப்படியான கடன் தொல்லைக்கு ஆளான நிலையில் காந்திபுரம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
தினமும் கடன் கொடுத்தவர்கள் போன் மூலமாகவும் நேராகவும் இவருக்கு கொடுத்த கடனைக் கேட்டு உள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டின் அருகே கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தன் கடனை திருப்பித் தர வேண்டி கேட்டுள்ளனர். வீட்டில் மனைவி தன் இரு பெண் முன்னர் கடனைக் கேட்டு அவமானப் படுத்தியதால் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு வாழைப்பழத்தில் விஷத்தை வைத்து சிவமுருகன் மற்றும் அவரது மனைவி இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு கடன் கொடுக்க வேண்டியவர்கள் கடன் கேட்டு தொந்தரவு செய்தவர்கள் என சில விவரங்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துள்ளார்.
இன்று அதிகாலை பக்கத்து வீட்டினர் வீட்டில் அலறல் சத்தத்தை கேட்டு கதவைத் உடைத்து பார்க்கும் பொழுது குடும்பத்தில் 3 நபர்களும் உயிரிழந்த நிலையில் கடைசி பெண் ஹேமலதா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஹேமலதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதை தொடர்ந்து மூன்று பேரின் உடல்களையும் வடவள்ளி காவல்துறையினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.