காவிரி ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை
நாமக்கல், ஜூன் 23 – காவிரி ஆற்றில் ஆகாயத்தா மரை செடிகள் அடர்ந்து படர்ந் துள்ளதால், பொதுமக்கள் தண்ணீ ரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் மற்றும் பள்ளிபாளை யம் வழியாகச் காவிரி ஆறு செல் கிறது. இந்த ஆறு செல்லும் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து படர்ந்துள்ளதால், தண் ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந் நிலையிலும், இந்த ஆகாயத்தா மரைகள் நீரோட்டத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. காவிரி ஆற்றில் தொடர்ந்து சாயக்கழிவு, தோல் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் கலப்பதால் நீர் ஏற்கனவே சீர் கெட்டுள்ளது. இந்நிலையில், ஆகா யத்தாமரை செடிகளின் ஆதிக்கம் மேலும் நிலைமையை மோசமாக்கி யுள்ளது. ஆறு மாசுபடுவதோடு மட்டு மல்லாமல், மீனவர்கள் மீன் பிடிக் கச் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள் ளது. மேலும், கதவணைகளில் மின் சாரம் உற்பத்தி செய்வதிலும் அவ் வப்போது பாதிப்புகள் உண்டா கின்றன. குறிப்பாக, மாலை நேரங் களில் வீடுகளில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகமாகப் படை யெடுப்பதாக அவர்கள் தெரிவிக் கின்றனர். அதிக அளவில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையால் கழிவு நீர், சாயக்கழிவு நீர் ஆகியவை தேங்கி, துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படு வதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, காவிரி ஆற்றில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை களை அகற்ற உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வா கம் விரைந்து செயல்பட்டு, காவிரி ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தா மரைகளை அகற்றி, மக்களின் சிர மங்களைப் போக்க வேண்டும் என் பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.