tamilnadu

img

தொழில் நெருக்கடி எதிரொலி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வங்கி கடனுதவி தருக! மாவட்ட ஆட்சியரிடம் தொழில்முனைவோர் முறையீடு

 கோவை, அக்.17- தொழில் நெருக்கடி நிலவி வரும் நிலையில் தொழிலாளர் களுக்கு போனஸ் வழங்க வங்கி கள் கடனுதவி வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண் டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  இதுதொடர்பாக, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் தலை மையில் தொழில்முனைவோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, ஜாப் ஆர்டர்களை நம்பி வாழ்க்கை நடத்தும் குறுந்தொழில் முனைவோரின் பெரும் பகுதியினர் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகிறோம். நாங்கள் வங்கிகளில் குறைந்தளவிற்கே வரவு, செலவு செய்து வருவதால் வங்கிகள் குறு தொழில்களுக்கு கடன் வழங்க முன்வருவது கிடை யாது. இதனால் குறுந்தொழில் முனைவோர்கள் பெரும்பகுதி யினர் தனியார் நிதி நிறுவனத்திடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பல மாதங்களாக தொழி லில் மந்தநிலை இருந்து வருவதால் ஜாப் ஆர்டர் கிடைக்கப் பெறாமல் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளோம். எனவே, குறைந்த வட்டியில் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். ஜாப் ஆடர்களுக்கான ஜி.எஸ்.டி முழுமையாக அரசு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. இதன்பின்னர் டேக்ட் தலைவர் ஜேம்ஸ் செய்தியாளர்களிடம் கூறு கையில், கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகுறு தொழில்கள் இயங்கி வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடியால் குறுந்தொழில் முனைவோர் கடுமையான நெருக் கடியில் உள்ளனர். இவ்வாறு கோவை தொழில் முனைவோர் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், மத்திய அரசு பண்டிகை கால கடன் வழங்க வங்கி நிர்வா கங்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் கோவையில் உள்ள வங்கி நிர்வா கங்கள் கடன் வழங்க மறுக்கின்றன. குறிப்பாக, பண்டிகை கால வங்கிக் கடன் கொடுக்க வங்கி நிர்வாகங் கள் பல்வேறு நிபந்தனைகள் விதிக் கின்றன. ஏற்கனவே, கடுமையான தொழில் நெருக்கடியில் சிக்கி யிருக்கும் நிலையில், பண்டிகை கால வங்கிக் கடன் கிடைக்க வில்லையெனில் தொழிலாளர் களுக்கு போனஸ் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். தீபாவளி பண்டி கைக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், பண்டிகை கால வங்கி கடன் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  கோவையின் தொழில்முனை வோர்கள் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வழியில்லை எனக் கூறி வங்கி கடன் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருப் பது கோவை மாவட்டத்தின் தொழில் நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.