tamilnadu

img

உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் மாதர் சங்கத்தின் ரத்ததான முகாம்

 கோவை, மே 1- அரசு மருத்துவமனைகளில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தவிர்க்கமுடியாத அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர்கள் வெளியில் வர இயலாத நிலையில் பெரும் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோவையில் அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்கத்தினர் மே தின நாளில் உதிரம் கொடுத்து உயிர்களை காப்போம் என்கிற முழக்கத்துடன் சிறப்பு ரத்த தான முகாமை வெள்ளியன்று நடத்தினர். கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து மாதர் சங்கத்தினர் நடத்திய இம்முகாம் ஆவாரம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.  

இம்முகாமில் ஏராளமான பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். முன்னதாக இம்முகாமை மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜோதிமணி மற்றும் பங்கஜவல்லி, மரகதம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கினைத்தினர்.  இதேபோல் காரமடை பகுதியில் மாதர் சங்கத்தினர் நடத்திய ரத்த தான முகமில் மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி மற்றும் மெகபுனிசா, ஜீவாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் ஆவாரம்பாளையத்தில் 60 யூனிட் ரத்தமும், காரமடையில் 40 யூனிட் ரத்தம் என மொத்தம்100 யூனிட் ரத்தம் இம்முகாம்களில் சேகரிக்கப்பட்டது.