tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மானிய வழிமுறைகளை எளிமைப்படுத்துக குறுந்தொழில் முனைவோர்கள் வலியுறுத்தல்

கோவை, ஜூன் 13- மானிய வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என  தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் கள் சங்க கூட்டம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று கோவை மாவட்ட அலுவலகத்தில் தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜி.பிரதாப்  சேகர், பொருளாளர் எம்.லீலாகிருஷ்ணன் மற்றும் துணைத்  தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங் கேற்றனர். இக்கூட்டத்தில் குறுந்தொழில் முனைவோர்கள் எதிர் கொள்ளும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன. இதில், மாநில  அரசு வழங்கும் இயந்திர மானியம் பெறுவதற்கு கடும் நெருக்கடிகளை சந்திப்பதாகவும், விதிமுறைகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக உண்மையான தொழில்  முனைவோர்களுக்கு மானியம் கிடைப்பதில்லை. மானிய விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும். உற்பத்தித் துறையில் மந்தநிலை மற்றும் தொழிலாளர் பற் றாக்குறையால் லேத், மில்லிங், சேப்பிங் மெஷின் பணிக ளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால், குறுந் தொழில் முனைவோர்கள் ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள், சிஎன்சி, விஎம்சி போன்றவற்றை வங்கிகள், தனியார் நிதி  நிறுவனங்கள், உறவினர்களிடம் கடன் பெற்று வாங்குகின்ற னர். இப்புதிய இயந்திரங்களுக்கு 25% மானியம் பயனுள்ள தாக இருந்தாலும், விண்ணப்ப செயல்முறை மற்றும் ஆய்வில்  தாமதம் ஏற்படுகிறது. மூன்று மாதங்கள் இயந்திரங்களை இயக்கிய பின் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை யில், அதிகாரிகள் ஆய்வுக்கு வர மாதக்கணக்கில் தாமதமா கிறது. மாவட்ட தொழில் மையங்களில் அதிகாரிகள் பற்றாக் குறையை போக்கி, கோவை போன்ற தொழில் நகரங்களில் போதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென இக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அனுமதியின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்

தருமபுரி, ஜூன் 13- பாலக்கோட்டில் உரிய அனுமதியின்றி இயங்கிய 31  வாகனங்களுக்கு ரூ.3.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள் ளது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் உரிய அனு மதியின்றி வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக வட்டார  போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜிடம் புகாரளிக்கப் பட்டன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், பாலக் கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்ரமணியன், புற வழிச்சாலை பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாகனங் களை சோதனை செய்ததில், ஆட்டோ, டிராக்டர், பள்ளி வாக னம் மற்றும் கர்நாடகா பதிவெண் கொண்ட மினி சரக்கு லாரி  ஆகியவைகள் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரிய  வந்தது. மேலும், பாலக்கோடு பகுதிகளில் சாலை வரி செலுத் தாமல் இயக்கப்பட்ட ஒன்பது ஜே.சி.பி உள்ளிட்ட 31 வணிக வாகனங்கள் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மொத்தம் 3 லட்சத்து 25 ஆயிரத்து 740  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் தகுதி சான்று, அனு மதி சான்று, சாலைவரி செலுத்தாத பள்ளி வாகனம், டிராக்டர்,  ஆட்டோ, மினி சரக்கு லாரி என 6 வாகனங்கள் பறிமுதல் செய் யப்பட்டன.

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

சேலம், ஜூன் 13- கடன் தொல்லையால் விஷம் கலந்த தோசையை இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத் துவிட்டு கணவன், மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்குட் பட்ட அங்காளம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (32). இவருக்கு புனிதா (27)  என்ற மனைவியும், தேவாஸ்ரீ (8), சபிதா (3) என்கிற  இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், பாலாஜி தினசரி கூலி வேலைக்கு சென்று வாங்கும் சம்பளம் கடனை அடைப்பதற்கு சரியாக  உள்ளதாகவும், வீட்டு செலவு மற்றும் குழந்தைக ளுக்கு எதுவும் செய்ய முடியவில்லை எனவும்  கூறி வந்துள்ளார். மேலும், கடன் கொடுத்தவர்கள்  பணம் கேட்டு மன உளைச்சலுக்குள்ளாக்குவ தால், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு தோசை யில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து, தானும் சாப் பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட இரண்டு குழந்தை கள், கணவன், மனைவி இருவரும் மயக்க மடைந்து கிடந்தனர். இதனைக்கண்ட அக்கம் பக் கத்தினர் 4 பேரையும் மீட்டு எடப்பாடி அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நான்கு பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுகுறித்து எடப்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சேலம் வழியாக செல்லும் ரயில் இயக்கத்தில் மாற்றம்

சேலம், ஜூன் 13- ஈரோடு - காவிரி பாலம் இடையே கான்கிரீட்  பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவ தால், சில ரயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற் றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளி யிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு, காவிரி  பாலம் அருகே பராமரிப்புப் பணிகள் நடைபெறு கிறது. இதனால், ஈரோடு, சேலம் வழியாக இயங் கும் சில ரயில்களின் வழித்தடத்தில் மாற்றம்  செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவையிலிருந்து தினமும் இயக்கப்படும் லோக்  மானிய திலக் விரைவு ரயில் கோவையிலிருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு, சேலம்  வழியாக செல்லும். சனியன்று (இன்று) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும் என வும், கூடுதலாக இந்த ரயில் கரூரில் நின்று செல்லும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல எர் ணாகுளம் - தாத்தாங்கர் விரைவு ரயில் ஈரோடு,  கரூர், சேலம் வழியாக செல்லும் எனவும், கரூரில்  இந்த ரயில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது.