tamilnadu

img

பணி நீக்க காலத்தை முறைப்படுத்தக்கோரி சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணி நீக்க காலத்தை முறைப்படுத்தக்கோரி சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 12- 41 மாத பணி நீக்க காலத்தை முறைப் படுத்த வேண்டும், என வலியுறுத்தி  நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி, சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி, ஆணை வழங்க வேண் டும். இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்வதை கைவிட்டு, நீதி வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியா ளர் சங்கத்தினர், கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம்  மாவட்டம், எடப்பாடியில் நெடுஞ்சா லைத்துறை கோட்டப் பொறியாளர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் கோட்டத் தலைவர் மு.தங்கராசு தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பு.சுரேஷ் துவக்கவுரையாற்றினார். கோட்டச் செயலாளர் தா.கலைவாணன் அந்தோணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், நெடுஞ்சாலைத் துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கி.தங்கராஜ், கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் க.முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலைப் பணி யாளர் சங்க மாநில துணைத்தலைவர் து.சிங்கராயன் நிறைவுரையாற்றினார். கோட்டப் பொருளாளர் க.மாரியப்பன் நன்றி கூறினார். கோவை கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு,  சங்கத்தின் கோட்டத் தலைவர் எம்.வெற்றிவேல் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சுந்த ரம், கோட்டச் செயலாளர் ச.ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாநிலப் பொருளாளர் எஸ். மதியரசன். அரசு ஊழியர் சங்க நிர் வாகி கே.பத்மநாபன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்  செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரை யாற்றினார். முடிவில், கோட்டப் பொரு ளாளர் வி.சின்ன மாரிமுத்து நன்றி கூறி னார்.