tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

குடிநீர் பிரச்சனையை சமாளிக்க பயன்பாட்டில்  இல்லாத ஆழ்குழாய்களை சீரமைக்கக் கோரிக்கை

உடுமலை, ஜூன் 19 - உடுமலை, மடத்துக்குளம் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர்  தட்டுப்பாட்டை சமாளிக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்கு ழாய்களை சீரமைக்க வேண்டும் என  கிராமப்புற மக்கள் எதிர் பார்க்கின்றனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடந்த மாதத் தில் இருந்து தினம் ஒரு பகுதியில் பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக சாலை மறியல்  போராட்டம் வரை நடத்தியும், ஊராட்சி நிர்வாகத்தால் பொது  மக்கள் பயன்படுத்துவதற்குத் தேவையான தண்ணீர் தர முடி யவில்லை. இதற்கு முக்கிய காரணம் திருமூர்த்தி அணையில்  இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு குடி நீர் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பயன்பாட் டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து ஊர் பொதுக் குழாய்களில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டது. இதனால் பல  கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் பயன்படுத்த முடியாத  நிலையில் உள்ளன. கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்க ளுக்கு தேவையான தண்ணீர் வழங்க முடிவதில்லை. மேலும்  கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை  அடிப்படையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது கிரா மங்களில் புதிய வீட்டு மனைகள் அதிகமானதால், தண்ணீர்  தேவை அதிகமாக உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம்  ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளை  பராமரிப்புப் பணிகள் செய்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொல்கத்தாவில் கொல்லப்பட்ட மகனின் சடலத்தைக் கொண்டு வர தாய் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 19 - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதிக்கு சரக்கு ஏற் றச் சென்ற, திருப்பூர் மாவட்டம் படியூரைச் சேர்ந்த ஓட்டுநர்  கொல்லப்பட்டார். அவரது சடலத்தை கொண்டு வரக் கோரி  அவரது தாயார் கண்ணீர் மல்க கதறி அழுத கோரிக்கை விடுத் துள்ளார். திருப்பூர் மாவட்டம் படியூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந் தவர் ராகுல். இவர் கொல்கத்தாவிற்கு சரக்கு ஏற்றி வருவ தற்காக ஈச்சர் வாகனத்தில் சென்றிருக்கிறார். அங்கு நடை பெற்ற தகராறில் திருநெல்வேலியைச் சேர்ந்த நபர் கத்தியால்  கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காய மடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரி ழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக  வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியி ருந்தது. இதன் மூலம் தான் ராகுல் உயிரிழந்த விபரம் குடும்பத்தா ருக்குத் தெரியவந்தது. இவருக்குத் திருமணம் முடிந்து இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பவம் நடை பெற்று பல நாட்கள் ஆனபோதும் ராகுலின் சடலம் இங்கு  கொண்டு வரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலை யில் ராகுலின் தாயார் கதறியழுதபடி மகனின் சடலத்தைக்  கொண்டு வர வேண்டும், அவரது உடமைகளைக் கொண்டு வர வேண்டும். கொலைக்குக் காரணமானவர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய காட்சி சமூக ஊட கத்தில் வெளியாகி உள்ளது.

புதிய பாசனப் பகுதி பயிர்களைக் காப்பாற்ற அமராவதி அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

திருப்பூர், ஜூன் 19 - திருப்பூர் மாவட்டம் அமராவதி புதிய பாசனப் பகுதியில்  நிலை பயிர்களைக் காப்பாற்ற ஜூன் 20 ஆம் தேதி முதல் 15  நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று தமிழ்நாடு  அரசு  நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. அமராவதி அணை பிரதானக் கால்வாயின் புதிய பாசனப்  பகுதிகளில் நிலை பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை  15 நாட்களுக்கு பிரதான கால்வாய் மதகு வழியாக வினாடிக்கு  440 கன அடி வீதம் 570.24 மில்லியன் கன அடிக்கு மிகாமல்  தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் அமரா வதி புதிய பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்று வியா ழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையமாகவே இருக்கும்  மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனை

உடுமலை, ஜூன் 19 - மடத்துக்குளம் அரசு மருத்துவம னையில் 8 மருத்துவர்கள் இருக்க வேண் டிய நிலையில், போதுமான மருத்துவர் கள் இல்லை. எனவே இங்கு உரிய மருத் துவர்களை நியமித்து, 24 மணி நேரம்  செயல்படுத்த வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் கோரிக்கை  வைத்துள்ளனர். மடத்துக்குளத்தின் மையப்பகுதி யில் இருந்த ஆரம்ப சுகாதார நிலை யத்தை அரசு மருத்துவமனையாக தரம்  உயர்த்தி, அதே வளாகத்தில் 30  படுக்கை வசதி கொண்ட புதிய கட்டிடம்  கட்ட ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள்  முடிக்கப்பட்டது. மேலும், மருத்துவ  உபகரணங்கள் மற்றும் இதர பொருட் கள் வாங்க தனியாக நிதி ஒதுக்கப் பட்டு தற்போது புதிய கட்டிடத்தில் மருத் துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நி லையில் புதிதாக திறக்கப்பட்ட இந்த மருத்துவமனையில் துறை சார்ந்த மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் உள் ளனர். இதனால் சிகிச்சைக்கு வரும்  பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்ற னர்.  மடத்துக்குளம் அரசு மருத்துவ மனை அமைத்த பகுதி திருப்பூர் - திண் டுக்கல் மாவட்டத்தின் எல்லைப் பகுதி.  திண்டுக்கல் மாவட்டத்தின் சாமிநாதபு ரம் முதல் தாளையம் கிராமங்கள் வரை  உள்ள மக்கள் மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதி மக்கள் என லட்சக்கணக் கானோர் தங்களுடைய மருத்துவ தேவைகளுக்கு சுமார் 20 கிலோ மிட்டர்  தொலைவில் உள்ள உடுமலை நக ருக்கு வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில் முதலில் ஆரம்ப சுகாதார  நிலையமாக இருந்த அதே கட்டிடத்தில்  தான், புதிய மருத்துவமனையை ஆரம் பித்தார்கள். ஆனால் இப்போதும் ஆரம்ப சுகாதார நிலையம் போல் தான்  செயல்படுகிறது. விரிவுபடுத்தபட்ட மருத்துவமனைக்கு குறைந்தபட்சம் எட்டு மருத்துவர்கள் தேவை. அதே போல் ஒரு ஷிப்டுக்கு குறைந்த பட்சம் எட்டு செவிலியர்கள் என்று மூன்று ஷிப் டுக்கு 24 பேர் தேவை, ஆனால் குறைந்த  அளவிலான செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் போதிய பராமரிப்பு  ஊழியர்கள், உரிய மருந்துகள் என  மருத்துவமனைக்கு தேவையான எவ் வித வசதிகளும் இல்லை. எனவே மக்களின் நலனை பாதுகாக்க  தொடங்கப்பட்ட மருத்துவமனையை 24  மணி நேரம் செயல்படும் வகையில், அவ சர கால சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத் துள்ளனர்.