அரசு மானியம் வந்தும் பணம் வழங்க மறுப்பு
சேலம், மே 26 – அரசு மானியம் வந்தும் வங்கியில் பணம் வழங்க மறுப்பதாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் புகார் அளித்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம், ஜருகு மலைப்பகுதியைச் சேர்ந்த மரகத பெண்கள் மகளிர் சுய உதவி குழுவினர், ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று அளித்த மனுவில், “மரகத பெண்கள் மகளிர் சுய உதவி குழு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஜருகு மலையில் அரளி மற்றும் மர வள்ளிக்கிழங்கு சாகுபடி செய்வதற்காக, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங் கும் விழாவில், ஜருகு மலையில் வைத்து மாவட்ட ஆட்சி யர் எங்களுக்கு மானியமாக ரூ. 8 லட்சத்து, 40 ஆயி ரத்திற்க்கான காசோலையை வழங்கினார். அந்தக் காசோலையை எடுத்துக் கொண்டு பன மரத்துப்பட்டி கூட்டுறவு வங்கியில் கேட்டபோது, ‘இந்த காசோலைக்கு மாவட்ட நிர்வாகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை’ எனக் கூறி எங்களை திருப்பி அனுப்பி விட்டனர். கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அரசு வழங் கிய இந்த மானியத் தொகை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் எங்களை அலைக்கழிப்பது டன், விவசாயம் செய்யவும் முடியாமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நட வடிக்கை எடுத்து, அரசு மானியமாக வழங்கிய பணத்தை விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள னர்.
நூறுநாள் வேலை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
தருமபுரி, மே 26 – தருமபுரி மாவட்டம் ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சியில், நூறுநாள் வேலை வழங்க கோரி ஊராட்சி மக்கள் திங்க ளன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து மனுவில் தெரிவித்திருப்பதாவது, தரு மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தற்குபட்டது. ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சி இங்கு எர்ரப்பட்டி, தகடூர், ஒட்டப்பட்டி, கோடியூர், செட்டியூர், தேங்காமரத்துப் பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு அனைத்து சமூக மக்களும் வாழ்நது வருகின்றனர். பெரும் பகுதி மக்கள் விவசாய கூலி வேலை செய்கின்றனர். இவ் ஊராட்சியில் உள்ள மக்கள் சுமார் ஆயிரம் பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்து வந்தனர். இந்த சூழலில் கடந்த நான்கு மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை. இதனால் இவ் ஊராட்சி மக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் விவ சாய வேலையும் கிடைக்கவில்லை. வேலை செய்ய வேண்டும் என்றால் வெளி மாவட்டங்களுக்கு சென்று வேலை செய்ய வேண்டும். எனவே ஏ. ஜெட்டி அள்ளி ஊராட்சி மக்களின் வாழ்வாதார நலன் கருதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.
நகராட்சி மண்டபத்தில் மது அருந்திய கேரம் போட்டியாளர்கள்
நாமக்கல், மே 26 – நகராட்சி மண்டபத்தை திறந்தவெளி மதுக்கூடமாக மாற்றிய கேரம் போட்டியாளர்கள் சிலரின் செயல் முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனியார் அமைப் பின் சார்பில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் பள்ளிபாளையம் நகராட்சி மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், சேலம், கோவை, சென்னை, கேரளம் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களை சேர்ந்த கேரம் போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 33 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட கேரம் போட்டியா ளர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கேரம் போட்டியில் பங்கேற்க வந்தி ருந்த போட்டியாளர்கள், மற்றும் அவர்களுடன் வந்தி ருந்த நபர்கள் நகராட்சி மண்டபத்தின் வளாகப் பகுதியி லும், பின்புற பகுதியிலும் சாவகாசமாக அமர்ந்து கொண்டு மது அருந்திக்கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கும்பல்கும்பலாக அமர்ந்து, வெட்ட வெளியில் வைத்து குடிக்க தொடங்கினர். மேலும் சிகரெட் புகைத்தப்படியே அங்கும் இங்கு மாக மது போதையில் சில நபர்கள் சுற்றி திரிந்தனர். இந் நிலையில் இது குறித்தான புகைப்படங்கள் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. தனியார் அமைப்பின் சார்பில் கேரம் விளையாட்டுப் போட்டிக்காக வாடகைக்கு விடப்பட்ட பள்ளிபாளையம் நகராட்சி கட்டிடத்தை மது அருந்தும் கூடாரம் போல மாறியதை கண்டு உள்ளூர் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறுகலான நீதிமன்ற சாலை – அகலப்படுத்த மனு
தருமபுரி மே-26 தருமபுரி நீதிமன்றத்திற்கு செல்லும் குறு கலான சாலையை அகலப் படுத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி தருமபுரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆட்சி யர் ரெ.சதீஷிடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மனுவில் தெரிவித்துள்ளதா வது, தருமபுரி நீதிமன்றத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குறுகலான சாலையாக உள்ளது. மேற்படி சாலையை விரிவாக்கம் செய்து இருவழிச் சாலையாக தரம் உயர்த்தி அமைத்து கொடுக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர் கள் தினமும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட் டோர் நீதிமன்றத்திற்கு வருகை தருகிறார் கள். நீதிமன்றம் நகர எல்லையிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளதால் திடீரென ஏற்படும் உடல் நல குறைவுக்கு முதலுதவி சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. மேற்படி சிரமத்தினை போக்க தருமபுரி ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெளிப் புற நோயாளிகள் சிகிச்சை மையம் ஒன்று அமைக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வழக்காடிகள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வந்து வழக்கறிஞர் கள் செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் தருமபுரி பேருந்து நிலையத் தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். தருமபுரி நீதிமன்ற வளாகத்தில் செல்போன் சேவை குறைபாடு உள்ளதால் நீதிமன்ற வளாகத்தில் செல்போன் டவர் அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
உடுமலை,மே 26- தென்மேற்கு பருவமழை தொடங்கிய தால் அமராவதி அணைக்கு நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக வருவதால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயந்து உள்ளது. உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெற்று வருவதுடன், ஆற் றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதா ரமாகவும் உள்ளது. இந்த அணையிலிருந்து கடந்த மாதம் பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக் கட்டு பாசன நிலங்களிலுள்ள நிலைப்பயிர் களை காப்பதற்காகவும் பொது மக்களின் குடி நீர் தேவைக்காகவும் அணையிலிருந்து உயிர் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பருவ மழை தொடங்கி உள்ளதால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி என்ற அளவில் கணிச மாக உயர்ந்துள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு தினங்களாக கேரளாவிலுள்ள மூணாறு, தலையாறு, மறையூர் மற்றும் வால் பாறை பகுதியில் மழை பெய்து அணையின் பிரதான நீர்வரத்து ஆறான பாம்பாற்றின் மூலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி அணைநீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடி யில் 51.25 அடியாக உள்ளது மேலும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1590 கன அடியாக உள்ளது.
அபராதம்
ஈரோடு, மே 26- பொது இடங்களில் குப்பை கொட்டினால் அப ராதம் விதிக்கப்படும் என மா நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரோடு மாநகராட்சிக்குட் பட்ட வணிக பகுதியில் சில கடைகள் மற்றும் சில குடியி ருப்பவர்கள் தங்களிடம் உரு வாகும் குப்பைகளை மாந கராட்சி வாகனத்திடம் கொ டுக்காமல் பொது இடங்களி லும் மற்றும் கழிவுநீர் வடிகா லில் கொட்டி செல்வதால் கழி வுநீர் வடிகால் அடைப்பு ஏற்ப டுகிறது. மேலும், பொது சுகா தாரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனையடுத்து, பொது இடங்களில் குப்பை கள் கொட்டிய ஐந்து கடைக ளுக்கு ரூ.2700 அபராதம் விதிக்கப்பட்டது. இனியும் இதுபோன்று நிகழ்ந்தால் அபராதம் விதிக்கப்படும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது.