tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் கைது

மேட்டுப்பாளையம், மே 24- மேட்டுப்பாளையம்-அவிநாசி நான்கு வழி சாலை விரி வாக்க திட்டத்திற்காக மரத்தை வெட்டுவதற்காக வந்த ஜே.சி.பி இயந்திரத்தை சிறைபிடித்த பொதுமக்கள், நில அள வை செய்யாமல் மரத்தை வெட்டக்கூடாது என வாக்குவாதத் தில் ஈடுபட்டதால், 15 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அன் னூர் வழியாக அவிநாசி வரை 36 கிலோ மீட்டர் தூரத் திற்கு ரூபாய் 250 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்க  மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு அதற்கான பணி களை துவங்கியுள்ளது. இதற்காக இவ்வழித்தடத்தில் உள்ள  1400 க்கும் மேற்பட்ட மரங்கள் தற்போது பூமியில் இருந்து  வேரோடு சாய்க்கப்பட்டு பின்னர் அவற்றை வெட்டி லாரி கள் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் அவி நாசி சுற்றுவட்டார பகுதி மக்கள் அன்னூர் வழியாக மேட்டுப் பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்கின்றனர்.  போக்குவரத்து முக்கியத்துவ உள்ள இச்சாலையில் தினசரி  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல் கின்றன. இப்பணிக்காக மேட்டுப்பாளையம் முதல் அவிநாசி  வரையிலான 1,432 சாலையோர மரங்கள் வெட்டப்படும் என  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான பணி கள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகின்றன. நவீன அறுவை இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்களின் உத வியுடன் இதுவரை இவ்வழியே பயணிப்போருக்கு நிழல் தந்து  உதவிய ஐம்பதாண்டுகளுக்கும் மேல் பழமையான ஆயிரத் திற்கும் மேற்பட்ட மரங்கள் வரிசையாக வெட்டப்பட்டு வரு கிறது. இந்நிலையில், சனியன்று காலை மேட்டுப்பாளையம் அன் னூர் சாலை நடுர் காபி ஹவுஸ் அருகே சாலையோரத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக நெடுஞ்சாலை துறை  அதிகாரிகள் ஜேசிபி இயந்துரத்துடன் வந்தனர். அப்போது  அப்பகுதி பொதுமக்கள் மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வருவாய்த் துறையினர் தங்க ளது நில அளவை செய்யவில்லை சாலை விரிவாக்க பணிக் காக எங்கள் இடம் எவ்வளவு எடுக்கப்படும் என தெரிவிக்க வில்லை இந்த நடைமுறையை முடித்த பின்னரே மரத்தை வெட்ட வேண்டும் என்று அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டு ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப் பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமனன் மற்றும் போலீ சார் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த தால் 15 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்து  மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் சாலை ஓரத்தில் இருந்த மரத்தை  வெட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கனமழை எதிரொலி: கோவை குற்றாலம் அருவி மூடல்

கோவை, மே 24- கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டதை தொடர்ந்து அருவி சனியன்று முதல் மூடப்படுவதாக  வனத்துறையினர் அறிவித்துள்ளனர். கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் மூன்று நாட்க ளுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  அறிவித்திருந்தது. மேலும் தென்மேற்கு பருவ மழையும் முன்கூட்டியே பெய்ய துவங்கியுள்ளது. இதில் கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவை குற்றாலம் அரு வியில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிக ளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து போளூவாம்பட்டி வனத்துறையினர் கூறுகை யில், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றா லம் அருவியில் குளிக்கச்  செல்ல பொதுமக்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சீரான நீர் வரத்து இருந்தால்  மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும் குற்றாலம் அருவிக்குச் செல்லும் நுழைவு வாயிலான சாடிவயல் பகுதியில் இது குறித்து அறி விப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

நகைக்காக மூதாட்டியை கொலை செய்தவர் கைது

சேலம், மே 24– ஓமலூர் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த வர், காவல் அதிகாரியை தாக்கி தப்பியோடினார் என்று போலீ சார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த நரேஷ்  (26) என்பவர், தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து  கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவத் தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே 20 ஆம்  தேதியன்று, ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி பகுதி யைச் சேர்ந்த சரஸ்வதி என்ற மூதாட்டி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவரை கொடூரமாக தாக்கி கொலை  செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளைய டித்துச் சென்றுள்ளார். இதேபோல், கடந்த 2020 ஆம் ஆண்டு  மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து,  நகைகளை கொள்ளையடித்து சென்றதும், மேலும் அதே  பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொடூரமாக  தாக்கி விட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதேபோல்,  விருதுநகர் பகுதியில் இளம்பெண்ணை வன்கொலை செய்த  வழக்கு மற்றும் வழிப்பறி, இருசக்கர வாகனம் திருட்டு உள் ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து  வந்துள்ளது. இந்நிலையில், சங்ககிரி அருகே மலையடிவாரம் ராய லூர் பகுதியில் நரேஷ் பதுங்கி இருப்பதாக சங்ககிரி காவல்  துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், அவரை சுட்டுப்பிடித்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், நரேஷை சுற்றி  வளைத்து பிடிக்க முயன்ற போது, சங்ககிரி காவல் நிலைய  உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வ குமார் ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய் வாளர் செந்தில்குமார் நரேசின் வலது காலில் துப்பாக்கி யால் சுட்டு பிடித்தார். தற்போது அவரை சங்ககிரி அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் என்றனர்.  முன்னதாக தகவலறிந்த சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) ராஜேஷ் கண்ணா  ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற் கொண்டனர். மேலும், வெட்டு காயங்களுடன் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போலீசார் மற்றும் நரேஷை பார்த்து  விசாரணை மேற்கொண்டனர்.

காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூன் 11 – 20இல் வாகனப் பிரச்சாரம்: சிபிஎம் அறிவிப்பு

தருமபுரி, மே 24- காவிரி உபரிநீர் திட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஜூன்  11 முதல் 20 வரை இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெறவுள்ளதாக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். பாஜக அரசின் வகுப்புவாத, கார்ப்பரேட் ஆதரவு, மக் கள் விரோத கொள்கைகளைக் கண்டித் தும், வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா, நூறு நாள் வேலை உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை முழுமை யாக நிறைவேற்ற வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11 முதல் 20 வரை மாவட்டம் முழு வதும் இரு சக்கர வாகன பிரச்சாரம், 300 மையங்களில் பொதுக்கூட்டம்  நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள் ளது. மேலும், மாவட்டத்தில் சமீபத் தில் பெய்த மழையால் விவசாயிகள்  பயிர் சாகுபடியில் ஈடுபட தொடங்கி யுள்ளனர். பயிர் சாகுபடியை ஊக்கு விக்கும் வகையில் அரசுடமையாக்கப் பட்ட வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும் தாராளமாக கடன் வழங்க முன்வர வேண்டும் என  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரி செய்யும் பணியில் திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள்

ட்டுப்பாளையம், மே 24- மேட்டுப்பாளையத்தில் கூட்டு குடிநீர் திட்ட  குழாய் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட  உடைப்பை விரைந்து சரி செய்யும் பணியில் திருப் பூர் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஓடும் பவானியாற்றிலிருந்து தண்ணீர் உறிஞ் சப்பட்டு ராட்சத குழாய்கள் மூலமாக திருப்பூர் மாந கராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 120 எம்எல்டி நீர் மேட்டுப் பாளையம்-அன்னூர் நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று பிற்பகல் திடீ ரென மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள நடூர் பாலம் அருகே திருப்பூருக்கு குடிநீர்  கொண்டு செல்லப்படும் ராட்சச குழாயில் உடைப்பு  ஏற்பட்டது. இதனால் வெளியேறிய குடிநீர் சுமார்  50 அடி உயரத்திற்கு மேலே எழும்பி அருவி போல  குடிநீர் கொட்டியது. இதனால் அப்பகுதியே வெள் ளக்காடாக காட்சியளித்தது. குழாயில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடி யது. இந்நிலையில், சனியன்று காலை குடிநீர்  குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் திருப்பூர் மாநக ராட்சி ஊழியர்கள் இயந்திரம் மூலம் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாலைக் குள் பணிகள் முடிவடைந்து சோதனைக்கு பின்னர்  வழக்கம் போல் நீர் விநியோகம் நடைபெறும் என  தெரிகிறது.