tamilnadu

img

தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடுக

தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடுக

இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, மே 18- சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும், என டி.பாலன் நினைவு இன்ஜினியரிங் தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. டி.பாலன்நினைவு இன்ஜினிய ரிங் தொழிலாளர் சங்க 3 ஆம்  ஆண்டு பேரவை கூட்டம், கோவை  மாவட்டம், மலுமிச்சம்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டச்  செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி  தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஏ.சண்முகசுந்தரம் வர வேற்றார். சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் ஆர்.வேலுச்சாமி துவக்கவு ரையாற்றினார். மாவட்ட இணைச் செயலாளர் கே.ரத்தினகுமார் வாழ்த்திப் பேசினார். சங்கத்தின்  பொதுச்செயலாளர் கே.மாரி முத்து, பொருளாளர் ஏ.கண்ணு சாமி ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். இதில், சிட்கோ  தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேண்டிய குடிநீர், கழிவறை மற்றும் மருத்துவ  வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்க வேண்டும். தொழிலாளருக்கு விரோதமான நட வடிக்கைகளை எதிர்த்து சட்ட  ரீதியான போராட்டம் நடத்துவது;  சங்கத்தில் கூடுதல் உறுப்பினர் களை சேர்த்து சங்கத்தை விரிவுப டுத்துவது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சங்கத்தின் தலை வராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளராக கே.மாரி முத்து, பொருளாளராக ஏ.கண்ணு சாமி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தொடர்ந்து, கோவையில்  நடைபெறவுள்ள சிஐடியு மாநில  மாநாட்டு நிதியாக ரூ.ஒரு லட் சம் முதல் தவணையாக வழங்கப் பட்டது. முன்னதாக, இன்ஜினியரிங் சங்க உறுப்பினரான செட்டி பாளையத்தை சேர்ந்த கிருஷ்ண சாமியின் மகள் கோபிகா, 10 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வில் 498  மதிப்பெண் எடுத்து மாநில அள வில் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடி வில், துணைத்தலைவர் பாலு நன்றி  கூறினார்.