ஆக்கிரமிப்பை அகற்றவில்லையெனில் போராட்டம்’
சேலம், மே 28- சேலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து சாலையை அதிகாரிகள் மீட்டு தர வில்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம், என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் ஊராட்சி ஒன்றியம், சேலதம்பட்டி பகுதியில் உள்ள கண பதி கார்டன் குடியிருப்பு பகுதியில் 60 பிளாட்டுகள் 1998 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. ஆரியா கவுண்டம்பட்டி - சேலத்தம்பட்டி பிர தான சாலையிலிருந்து 30 அடி சாலை, இந்த குடியிருப்பு பகுதிக்கு இருந்து வந்தது. இந்நிலையில், குடியிருப் புக்கு செல்லும் சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் பாதிப்படைந்த மக்கள் முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப் பினர். அதன்மீது விசாரணை மேற் கொண்ட அதிகாரிகள், சேலம் மேற்கு வட்டாட்சியர் மனோகரன், சேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், சூரமங்கலம் காவல் ஆய் வாளர் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்க வந்தனர். இதற்கு தனிநபரின் குடும் பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் இரண்டு நாள் அவகா சம் அளித்தனர். இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் சுந்தரம், சேலம் தாலுகா அமைப்புக்குழு உறுப் பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், 1998 ஆம் ஆண்டு 60 குடியிருப்புகளை தனித்தனியாக வாங்கியதாகவும், இதனை விற் பனை செய்த முருகன் தற்போது பொதுப்பாதையை ஆக்கிரமித்து, பிரச்சனை செய்து வருகிறார். நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதிகாரிகள் சாலையை மீட்க வந்த னர். இருப்பினும் முருகன் மற்றும் சடையன், முத்து ஆகியோர், தங்க ளுக்கு எந்த உத்தரவும் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அளிக்க வில்லை என தெரிவித்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் அவகா சம் அளித்து அதிகாரிகள் கலைந்து சென்றனர். சாலையை 2 நாட்களில் மீட்டுத்தரவில்லையெனில், அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.