tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்களை முழுநேர அரசு ஊழியராக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப்.22- அங்கன்வாடி ஊழியர்கள், உதவி யாளர்களை முழு நேர அரசு ஊழிய ராக்கி ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சிஐடியு தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட் டம் செய்தனர்.   சங்கத்தின் மாவட்டத் தலைவர்  த.மாலதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன் வாடி ஊழியர்கள், உதவியாளர் களை முழுநேர அரசு ஊழியராக்கி ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர்களுக்கு ஓய்வூதி யம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ரூ.9  லட்சமும், உதவியாளருக்கு ரூ.5  லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கமிட்டனர்.  இதில், மாவட்டச் செயலாளர் ரஹமத் நிஷா கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியு மோட் டார் சங்க மாவட்டச் செயலாளர் ஒய். அன்பு, ஆட்டோ சங்க மாவட்ட செய லாளர் எஸ்.சிவராமன், ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  பாக்கியம் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். சிஐடியு தமிழ்நாடு அங்கன்வாடி  ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் மாநில இணைச் செயலாளர்கள் கே.சித்ரா, அனிதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் சி. சித்ரா நன்றி கூறினார்.