tamilnadu

img

தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தனியார் வங்கியின் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சேலம், மே 31- சங்ககிரி அருகே தனியார் வங்கி யின் கடன் தொல்லையால் விசைத் தறி தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியு றுத்தி அவரது உறவினர்கள் ஆட்சி யர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், இடங்கணசாலை அருகே உள்ள மேல் மாடயாம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் மணி. விசைத் தறி தொழில் செய்து வந்த இவர்,  தனது வீட்டை அடமானம் வைத்து  ராசிபுரத்திலுள்ள வெரி டாஸ் பைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறு வனத்தில் கடன் வாங்கி முறையாக மாதம் கடனை கட்டி வந்துள்ளார். இந்நிலையில், மே மாதம் 20 நாட்க ளாக கடனை திருப்பி செலுத்தாத தால், உடனடியாக கடனை செலுத்த வேண்டும், என வங்கி  ஊழியர்கள் தொடர்ந்து தொல்லை யளித்து வந்துள்ளனர். இந்நிலை யில், வெள்ளியன்று காலை வீட் டுக்கு வந்த வங்கி ஊழியர்கள், கடனை திரும்பக்கேட்டு மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. இதனால்  மனமுடைந்த மணி, வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டு தூக் கிட்டு தற்கொலை செய்து கொண் டார். ஒரு மணி நேரமாகியும் வங்கி  அதிகாரிகள் அங்கிருந்து செல்லா மல், அவர் இறந்த நேரத்திலும் அங் கேயே இருந்துள்ளனர். பிறகு அவ ரது மகள் வந்து, ஜன்னல் வழியாக பார்த்த போது தான், அவர் தூக் கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பின்னே வங்கி ஊழி யர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித் துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட  மணி என்பவருக்கு, மகேஸ்வரி என்ற மனைவியும், மதன் மற்றும்  தர்ஷினி என்ற இரண்டு கல்லூரி  மாணவர்களும் உள்ளனர். இந்த  சம்பவம் தொடர்பாக மகுடஞ் சாவடி காவல் நிலையத்தில் புகார ளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்கொலைக்கு காரணமான தனி யார் வங்கி நிர்வாகத்தினர் மீது  உரிய நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும். மணியின் குடும்பத் திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி அவ ரது உறவினர்கள் சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குடும்பத்தினருக்கு சிபிஎம் ஆறுதல் தனியார் வங்கி அதிகாரிகளின் மிரட்டலால் விசைத்தறிக் கூடத்தி லேயே தொழிலாளி மணி என்பவர்  தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் அதிர்ச்சியை உண்டாக்கியது. தற்கொலை செய்து கொண்ட மணி  அவர்களின் இல்லத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  குழு உறுப்பினர் எ.குமார் தலைமை யில் மாவட்ட அமைப்புக் குழு உறுப் பினர்கள் எ.முருகேசன், எஸ்.பவித் ரன் கட்சியின் முன்னணி ஊழியர்  எம். குணசேகரன் சங்ககிரி தாலுகா  குழு உறுப்பினர் சீனிவாசன் இந் திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச்  செயலாளர் பெரியசாமி இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் டார்வின் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறு தல் தெரிவித்தனர்.  இச்சம்பவம் குறித்து, மணியின் மகன் மதன் தலைவர்களிடம் கூறு கையில், தங்கள் தந்தை முறை யாக தனியார் வங்கிக்கு பணம் செலுத்தி வந்தார். இந்த மாதம் கல்வி செலவு அதிகம் இருந்ததால் பணம் கட்ட தாமதமானது. அத னால் பத்து நாட்கள் பணம் கட்ட முடி யவில்லை. தொடர்ந்து வங்கி அதி காரி கார்த்தி தலைமையில் 5 பேர்  தொந்தரவு செய்ததால் அவர்கள் இருக்கும் போதே தங்கள் தந்தை  தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார். தமிழக அரசு தற்போது  110 விதியின் கீழ் கட்டாயமாக கடன்  வசூலித்தால் மூன்று ஆண்டு சிறை  தண்டனை விதிக்கப்படும் என்ற  அறிவிப்பு உள்ளது. இது தெரிந்தும்  வங்கி அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக  பேசி தங்களின் தந்தை உயிரை எடுக்க காரணமாகி விட்டனர். தமி ழக அரசு உடனடியாக 5 பேரையும் கைது செய்ய வேண்டும். குடும்ப தலைவரை இழந்து தங்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என்றார்.