tamilnadu

img

தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மாசு இல்லா விறகு அடுப்புக்கு ஆர்வம் காட்டும் மக்கள்

தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மாசு இல்லா விறகு அடுப்புக்கு ஆர்வம் காட்டும் மக்கள்

சுற்றுச் சூழல் பாதிப்பு மற்றும்  உடல் உபாதைகளை தவிர்க்கும்  வகையில் விறகு அடுப்புக்கு மாற் றாக சமையல் எரிவாயு உருளை அறிமுகப்படுத்தப்பட்டு, அதற் கான அரசு மானியமும் வழங்கப் பட்டது. மேலும், சமையல் எரி வாயு உருளைக்கு மக்கள் செலுத் தும் கட்டணத்தில் இருந்து குறிப் பிட்ட தொகையை மானியமாக மீண்டும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என ஒன்றிய மோடி அரசு தெரிவித்தது. ஆனால், இந்த மானியத்தொகை ஆரம்பத்தில் வழங்கப்பட்டு பின் னர் படிப்படியாக மானியம் வழங்கு வது கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டதாகேவே தெரிகிறது.  மேலும், மோடி ஆட்சிக்கு வரு வதற்கு முன்பு வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையும் ரூ.400 இல் துவங்கியது. நாடு முழு வதும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு அதிகம் ஏற்பட்ட நிலையில் வீட்டு உபயோக சிலி ண்டர் விலை  இன்று ரூ.868 க்கும்  விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. இந்த சமையல் எரிவாயு விலை உயர்வு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. பெரும் பாலான மக்கள் சமையல் எரி வாயு பயன்பாட்டை குறைத்து, மின்சார அடுப்பு பயன்படுத்தவும் துவங்கினர். இந்நிலையில் கோவையில் தயாரிக்கப்பட்டுள்ள  சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் “ராக்கெட் ஸ்டைவ்”  என்ற விறகு அடுப்பு  சமீபத்தில் உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் சிலிண்டருக்கு மாற்றாக விறகு அடுப்பை வாங்க மக்கள் ஆர் வம் காட்டி வருகின்றனர். மேலும்  உணவகங்களுக்கும், பெரிய நிகழ்ச்சிகளுக்கும் சமையல் எரி வாயு உருளைக்கு பதிலாக இந்த  “ராக்கெட் ஸ்டவ்” பயன்படுத்து கின்றனர். வீணாகும் கட்டைகள், மரப்பட்டைகள், தேங்காய் தொட்டிகள்  போன்றவற்றை பயன் படுத்தி இந்த அடுப்பை பயன் படுத்துதால் செலவு முற்றிலு மாக குறைவதாக மக்கள் தெரி விக்கின்றனர். இது குறித்து பேசிய இல்ல தரசி சித்ரா, நாளுக்கு நாள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அதனை வாங்குவதில் சிரமம் ஏற் பட்டுள்ளது. இதன் காரணமாக  விறகு அடுப்பை வாங்கியுள்ளேன். இது சமையல் எரிவாயுவை விட பயனுள்ளதாக இருக்கிறது. சமையல் வேலையை விரைந்து  முடிக்கலாம். தண்ணீர் காய வைப் பது, வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்துகிறோம். சமையல்  சிலிண்டர் எரிவாயை பயன் பாட்டை குறைத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட் டுமே வாங்குகிறோம் என தெரி விக்கின்றனர்.  இது குறித்து பேசிய உணவக உரிமையாளர் கார்த்திகேயன், சிலிண்டர் விலை உயர்வால் கமர்சியல் பயன்பாட்டிற்கு எரி வாயு பயன்படுத்துவதில் சிரமம்  இருந்தது. இதன் காரணமாக  விறகு அடுப்பை பயன்படுத்து கிறோம். இது எரிவாயு சிலிண்டர்  பயன்பாட்டை விட மிகுந்த பய னுள்ளதாக இருக்கிறது. தினமும் ரூ.1,800 வரை சேமிப்பு ஆகிறது. சமையலும் விரைந்து ஆவதாக தெரிவிக்கின்றார். இது குறித்து பேசிய விறகு அடுப்பு தயாரிப்பாளர் வடிவேல், வீணாகும் மரக்கட்டைகள், தேங் காய் தொட்டிகள் மட்டுமே இந்த  அடுப்புக்கு போதுமானது. விரை வில் சமையல் செய்ய முடியும்.  புரோய்லர் மூலம் எரிவதால் புகை  முற்றுலுமாக வருவது தவிர்க்கப் படுகிறது. சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு பின் அதிகளவு மக்கள் இந்த அடுப்பை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆரம் பத்தில் உணவகம், பெரிய நிகழ்ச்சிக்காக மட்டுமே மக்கள் வாங்கினர். இப்போது எரிவாயு விலை உயர்வுக்கு பின் வீட்டு உபயோகத்திற்கு மக்கள் கேட்ட தால் சிறிய அளவிளான அடுப்பை  வாங்கி வருகின்றனர். அனைத்து  மாவட்டங்களில் இருந்தும், கேர ளம், கர்நாடகா, மகாராஸ்டிரா மாநிலங்களுக்கு வாங்கி செல்வ தாக தெரிவித்தார். - கவி -