tamilnadu

img

கோவை: லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பலி  

கோவையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.  

கோவை மாவட்டம் வாளையாறு அடுத்த கே.ஜி  சாவடி அருகே கேரளாவிலிருந்து ஆம்னி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் ஆம்னி வேனில் வந்த மித்ரன்(வயது 3), அஞ்சுதா ஸ்ரீ(வயது 5) ஆகிய இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

அதனைதொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;