tamilnadu

img

மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மோடி அரசின் புதிய தாக்குதல்

மக்களின் வாழ்வாதாரத்தின் மீது மோடி அரசின் புதிய தாக்குதல்

“மாதம் மும்மாரி பெய்கிறதா?” என்று மன்னன் அமைச்சரிடம் கேட் கும் ஒரு பிரபலமான வசனம், ஆட்சி யாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள தொடர்பின் அவசி யத்தை உணர்த்துகிறது. மழை பொழிகிறதா என்பது கூட மன்ன னுக்குத் தெரியவில்லை என்றால், அவன் ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கும்? இதேபோன்ற ஒரு நிலையில்தான் மோடி தலைமையி லான ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்களின் துன் பங்களைப் பொருட்படுத்தாமல், கார்ப்பரேட் நலன்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து புதிய சட்டங்களை இயற்றி, மக்களை வாட்டி வதைக்கிறது. இதன் சமீபத் திய உதாரணமாக, ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள 9 புதிய விதிமுறை கள். நரியின் கனவில் எலும்பு மழை ஏழை, எளிய, நடுத்தர உழைப் பாளி மக்கள் தங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி, சிறு சேமிப்பாகச் சேர்த்து வைக்கும் தங்க நகைகளின் அளவு 10 பவுன் என்றால் அதுவும் அதிகபட்சம்தான். இந்திய மக்களின் பெரும் சேமிப் பாகவும், பாதுகாப்பான சொத்தாக வும் இந்த நகைகளே உள்ளன. இதன் மீதும் ஒன்றிய அரசுக்குக் கண் உறுத் துகிறது என்றால், “செத்தாலும் நரி யின் கனவில் எழும்பு மலையின் மீது தான்” என்ற சொலவடையே நினை வுக்கு வருகிறது. இந்தியப் பொதுத்துறை நிறுவ னங்களை ஒவ்வொன்றாகத் தனியா ருக்குத் தாரை வார்ப்பதும், இதற் கென்றே தனி அமைச்சகத்தை ஒன் றிய பாஜக அரசு உருவாக்கியதும் நாம் அறிந்ததே. இது போதா தென்று, இந்தியப் பொதுத்துறை வங்கிகளிலிருந்து எளிய மக்களை  வெளியேற்றிவிட்டு, கார்ப்பரேட்டு கள் வங்கிகளை மொத்தமாகச் சுருட்டுவதற்கான அறிவிப்பை ஒன் றிய மோடி அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மாதம் 20 ஆம் தேதி அறிவித்துள்ளன. இதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அடமானம் வைத்திருக்கும் தங் கத்தை முழுமையாக மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும் என்றும், ஏற்கனவே இருந்த விதிமுறைப்படி அடமானக் காலத்தை நீட்டிக்க முடி யாது என்றும் அறிவித்திருந்தது. இதுவே மக்களைப் பெரும் அதிர்ச் சிக்குள்ளாக்கியிருந்த நிலையில், தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட் டுள்ள புதிய 9 விதிமுறைகள் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய  விதிகளில் என்ன கூறுகிறது:  தங்கத்தை அடமானம் வைக்கும் போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் கடனாக பெறலாம். அடமா னம் வைக்கப்படும் நகையின் உரி மையாளர் என்பதற்கான ஆதா ரத்தை கடன் வாங்கும் நபர், வங்கி யிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்க  நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கி யில் இருந்து சான்று வழங்க வேண் டும். தங்க நகைகளில் 22 காரட் அல் லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும். தங்க நகைக ளுக்கு மட்டுமே கடன்கள் வழங்கப் படும். நகை அல்லாத தங்கக் கட்டிக ளுக்கு கடன் வழங்கப்படாது. 1 கிலோ வரையிலான தங்க நகைகளை மட் டுமே வங்கியில் அடமானம் வைக்க முடியும். நகை வாங்கியதற்கான ரசீது இல்லாத பட்சத்தில், நகை தன்னு டையதுதான் என்பதை உறுதிப்ப டுத்துவதற்கான சான்றிதழை வங்கி யிடம் வாடிக்கையாளர் அளிக்க வேண்டும். இதுபோன்ற 9 விதிமுறை கள் போடப்பட்டுள்ளது.  ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தி னர் மற்றும் விவசாயிகள் தங்களி டம் உள்ள தங்க நகைகளை வங்கி களில் அடகு வைத்து கடன் பெறு கின்றனர். தனியார் அடகு கடைகளில் கடன் பெற்றால் அதிகளவு வட்டி விகி தம் இருக்கும் என்பதால், தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டிக்கு பொதுமக்கள் நகை கடன் பெறுகின்றனர். பெரும்பாலும் அவ சர மருத்துவச் செலவுகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், விவசாய சாகு படி, புதிய தொழில் துவங்க பெரும் பாலும் நகை கடன்களை பெறுகின்ற னர். இந்நிலையில், ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நகை கடன்கள்  பெற புதிதாக விதித்துள்ள நிபந்தனை களால் என்ன செய்வது என்று தெரி யாது மக்கள் விழிப்புதுங்கி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நமது தீக்கதிர் நிருபர்கள் பொதுமக்களின் கருத்தை அறிந்து நமது வாசகர்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.