tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் மாயம்

கோவை, மே 29- பொள்ளாச்சியில் மனநலம் பாதித்த இளைஞர் கொலை  செய்யப்பட்ட விவகாரமே இன்னும் முடியாத நிலையில், அன் னூர் அருகே ஒரு ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறு வன் மாயமான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே நல்லகவுண்டன் பாளையத்தில், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் ஆதரவற்றோர் இல்லமாக  இயங்கி வருகிறது. விக்ரம், கோவை சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் (NGO) மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளர் நல அலுவ லரின் பரிந்துரையின் பேரில், கடந்த அக்டோபர் 9, 2024 ஆம்  தேதியன்று இந்த ஆசிரமத்தில் பராமரிப்பிற்காக அனும திக்கப்பட்டார். கடந்த மே 10 ஆம் தேதியன்று, குமாரபாளை யம் அருகே உள்ள சேவை மையத்திற்கு தொழிற்பயிற்சிக் காக 7 பேருடன் அழைத்துச் செல்லப்பட்டார். தேநீர் இடை வேளையின்போது விக்ரம் மாயமானதாக ஆசிரம ஊழியர் கள் தெரிவித்துள்ளனர். அவர் கருப்பு நிற டீ-சர்ட் மற்றும் அரை கால் பர்முடாஸ் அணிந்திருந்ததாக புகாரில் குறிப்பிடப்பட் டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆசிரம ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் அன்னூர் காவல் நிலையத்தில் புதனன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினர் தீவிர விசா ரணையை முன்னெடுத்துள்ளனர்.

புதிய வாரச்சந்தை வளாகம் திறப்பு

கோவை, மே 29- மோப்பேரிபாளையம் பேரூராட்சியில் புதிய வாரச்சந்தை  வளாகத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவை மாவட்டம், மோப்பேரிபாளையம் பேரூராட்சி யில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய  வாரச்சந்தை வளாகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொலி காட்சி மூலம் வியாழனன்று திறந்து வைத் தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப் பினர் கணபதி ராஜ்குமார், பேரூராட்சித் தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இந்த வாரச்சந்தை, கோவை  மாவட்டத்திலேயே ஒரு முன்மாதிரி சந்தையாக உருவாக் கப்பட்டுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்ட விற்பனையாளர் கள் ஒரே நேரத்தில் தங்கள் பொருட்களை விற்கக்கூடிய வகை யில் கட்டப்பட்டுள்ளது. இது அப்பகுதி விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக காய்கறிகளை விற் பனை செய்ய உதவுவதோடு, பொதுமக்களுக்கு தரமான, மலிவான பொருட்களைப் பெறவும் வழிவகுக்கும்.

தனிப்பட்டா வழங்கக்கோரி மனு

ஈரோடு, மே 29- பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழ னன்று நடைபெற்ற ஜமாபந்தியில், பணிக்கம்பாளையம் பட்டி யலின மக்கள் மனைப்பட்டா கேட்டு மனு அளித்தனர். அம்மனுவில், ரீச. 720/5, 9 முதல் 29 முடிய உள்ள உட்பிரிவு களில் கடந்த 50 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இந்த  நிலம் 1948 ஆம் ஆண்டு பெருந்துறை சார் பதிவாளர் அலுவலக பத்திர எண்: 1098இன்படி விலைக்கு வாங்கி தங்களுக்குள் பிரித்துக் கொண்டதாகும். இதற்கு பெருந்துறை வட்டாட்சியர் மூலம் கூட்டுப்பட்டாவும் கொடுக்கப்பட்டுள்ளது. தனிப்பட்டா கோரிக்கை கேட்டு கடந்த சில ஆண்டுகளாக மனு அளித்துள் ளோம். ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே,  தனித்தனி வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் நிர்வாகி பழனிசாமி உடனிருந்தார்.

தாய் யானையை தேடும் பணி தீவிரம் மே.பாளையம்,

மே 29- சிறுமுகை வனச்சரக பகுதியில் குட்டி யானையை  மீட்ட வனத்துறையினர், சிகிச் சையளித்து பராமரித்து வரு வதோடு அதனை விட்டு  பிரிந்து சென்ற தாயை கண் டுபிடிக்கும் பணியில் மூன்றா வது நாளாக ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக பகு தியில் உள்ள குமரன் சாலை  என்னும் வனப்பகுதியில் தன் னந்தனியே சுற்றி திரிந்த ஒரு குட்டி யானையை மீட்ட வனத்துறையினர் செவ்வா யன்று முதல் யானை குட் டிக்கு தேவையான சிகிச்சை மற்றும் தீவனம் கொடுத்து பராமரிக்க துவங்கினர். மேலும், குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க வேண்டி தாய் யானையை வனத்துறையினர் தேடும் பணியை துவக்கினர். குட்டி யானை கண்டறியப்பட்ட இடம் சத்தியமங்கலம் வனப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்குள்ள வனத்துறையின ருக்கும் தகவல் தெரிவித்து தாய் யானையை தேடும் பணி நடைபெற்றது. புதன்னறு குட்டி கண்டறியப்பட்ட வனத்தை சுற்றுவட்டார காட்டு பகுதியில் தாய் யானையை தேடிய வனத்து றையினர் அப்பகுதியில் உள்ள பவானி கரையோர காடுகளில் தேடும் பணியை துவக்கியுள்ளனர். மோட்டார் படகு மூலம் சென்று தாய்  யானையை தேடி வருகின்ற னர். இந்நிலையில், மூனறா வது நாளாக (வியாழக்கி ழமை) ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 பேருக்கு  7 ஆண்டு சிறை

நாமக்கல், மே 29- வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள் ளது. நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், பொம் மைக்குட்டைமேடு பகுதி யில் லாரியை வழிமறித்து ஓட்டுநர்களிடம் பணம், கைப் பேசியை நான்கு பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது. இதுகுறித்து லாரி  ஓட்டுநரான பரமத்தி வேலூர் வட்டம், குப்புச்சிபாளையத் தைச் சேர்ந்த பிரகாஷ் (38) நல்லிபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். இந்த வழிப்பறி தொடர் பாக நாமக்கல் களங்காணி யைச் சேர்ந்த கார்த்திக் (20), திருமலைப்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீதரன் (22), நவ ணியைச் சேர்ந்த அருள் குமார் (26), கரடிப்பட்டி யைச் சேர்ந்த சூர்யா (24) ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்து நிலை யில், புதனன்று குற்றச்சாட் டப்பட்ட 4 பேருக்கும் மொத்த மாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.500 அப ராதம் விதிக்கப்பட்டது.