மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம்
நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் வெள்ளியன்று நடைபெற்றது. மதுக்கரை ஒன்றியச் செயலாளர் எம்.பஞ்சலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ஆர்.பழனிச்சாமி, வி.இராமமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு மாநகரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு நகரக்குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன், மூத்த தலைவர் ப.மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாமக்கல் மாவட்டம், குமாரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத்திற்கு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வீ.தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.