மாங்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜூன் 11- மாங்காய் கொள்முதல் விலை வீழ்ச்சி யடைந்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு உரிய தலையீடு செய்ய வேண்டும், என வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாங்காய் கொள்முதல் விலை வீழ்ச்சிய டைந்து, கிலோ ரூ2க்குக்கூட எடுக்க ஆளில் லாமல் மரத்திலேயே பழுத்து அழுகி விழும் கொடுமை நடந்து வருகிறது. ஆனால், நுகர் வோருக்கு ரூ50க்குள்கீழ் எந்த மாம்பழமும் கிடைக்கவில்லை. சில மாம்பழங்கள் கிலோ ரூ.200யும் தாண்டி விற்பனை செய்யப்படு கிறது. இந்த முரணை சரி செய்து, விவசாயி களை பாதுகாக்க தமிழக அரசு உரிய தலை யீடு செய்ய வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடத்தி, கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மா விவசா யிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என வலியுறுத்தி செவ்வாயன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாங்கனிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சங்ககிரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.ராஜேந்தி ரன் தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர் ஏ.அன் பழகன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.அரியாக்கவுண் டர், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்த லைவர் பி.தங்கவேலு, நிர்வாகிகள் ஏ.சீனிவா சன், மாது, என்.கனகராஜ், பி.சத்யராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர்.