8 ஆவது நாளாக தொடரும் கே.ஜி.டெனிம் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
மேட்டுப்பாளையம், மே 26- தொடர் மழையிலும் எட்டாவது நாளாக தொடரும் கே.ஜி. டெனிம் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், ஜடையம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கே.ஜி.டெனிம் என்ற ஆலை நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக் கையை கண்டித்து, தொழிற்சாலை முன்பு சிஐடியு தலைமை யில் எட்டாவது நாளாக (திங்களன்று) கொட்டும் மழையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழையிலும் குடை பிடித்துக் கொண்டு போராட்டம் நடத் தும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகங்கள் தொழிலாளர்களை அழைத்து பேச மறுப் பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதில், கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க பொரு ளாளர் ஆனந்தகுமார், சிபிஎம் தாலுகா செயலாளர் கே. கன கராஜ், தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார போக்குவரத்து ஓய்வூதியர் சங்கத்தின் மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு
கோவை, மே 26 - தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்து துறை ஓய்வூதி யர் நல சங்கத்தின் முதல் மாநில மாநாட்டின் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற் றது. தமிழ்நாடு அரசு சுகாதார போக்குவரத்து துறை ஓய்வூதி யர் நல சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவையில் 10-7-2025 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் சனியன்று கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் எஸ். நடராஜன் தலைமை வகித்தார். இதில், வரவேற்பு குழு தலைவராக என். அரங்கநாதன், செயலாளராக கே.அருண கிரி, பொருளாளராக கணேசன் உள்ளிட்ட 18 பேர் கொண்ட வரவேற்பு குழு நிர்வாகிகள் ஆக தேர்வு செய்யப்பட்டனர்.
முதல்போக நஞ்சை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு
கோபி, மே 26- கொடிவேரி பாசனம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல்போக நஞ்சை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி பாச னம் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதி யில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட சாகுபடியில் நெல் சாகுபடி மட்டும் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டில் இருபோகம் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்நிலை யில் கடந்த சில நாட்களுக்கு முன் பவானிசாகர் அணையிலி ருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத் திற்கு தண்ணீர் திறக்க வேண்டி தமிழக அரசுக்கு பாசன விவ சாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு பவானிசாகர் அணையின் நீர் இருப்பு, மற்றும் நீர் வரத்தை ஆய்ந்து பவானிசாகர் அணையிலிருந்து தடப் பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலில் முதல்போக நஞ்சை சாகுபடிக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க ஆணை பிறப் பித்திருந்தது. இதனடிப்படையில், திங்களன்று கொடிவேரி அணை யில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயி கள் கலந்து கொண்டு தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட்டு பாசன வாய்க்காலில் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, கொடி வேரி உதவி பொறியாளர் குமார், அரக்கன்கோட்டை உதவி பொறியாளர் சக்தி, பாசன சங்க தலைவர் சுபி.தளபதி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தடப்பள்ளி அரக் கன்கோட்டை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப் பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் காலம் தாழ்த்தி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பருவத்திற்கேற்ப தண்ணீர் திறப்பு இல்லை கடந்த காலங்களில் கொடிவேரி பாசனத் திற்கு ஏப்.14 ஆம் தேதியன்று தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததை கடந்த சில ஆண்டுகளாக பருவம் மாறி தண்ணீர் திறக்கப் பட்டு வருகின்றனர். மேலும் வேளாண் நிலையங்களில் பருவத்திற்கேற்ப விதை நெல் ரகங்கள் போதிய இருப்பு இல்லை. இதனால் விவ சாயிகளுக்கு விதை நெல்லுக்கு தனியாரிடம் கூடுதல் விலைக்கு விதை நெல் பெற வேண்டிய சூழல் ஏற் பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் கொடிவேரி தடப் பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்கு ஏப்.14 ஆம் தேதியே தண்ணீர் திறக்க வேண்டும். வேளாண் நிலையங்களில் பரு வத்திற்கேற்ப விதை நெல் ரகங்கள் இருப்பு வைத்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரக்கன்றுகளை நட வேண்டுமென கோரிக்கை
ஈரோடு, மே 26- ஈரோடு மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றிய 5 ஆயிரம் மரக் கன்றுகளுக்கு பதிலாக 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடக் கோரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் மனு அளித்தார். இதுகுறித்து அம்மனு வில், கடந்த ஆட்சி காலத் தில் ஈரோடு மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டு திட்டத் தின் கீழ், ஈரோடு – கோபி 4 வழிச் சாலை விரிவாக்கம், ஈரோடு – பவானி – மேட்டூர் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பணிகளுக்காக சாலையோ ரங்களில் இருந்த சுமார் 5 ஆயிரம் மரங்கள் வெட்டப் பட்டன. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் கோடை வெப்பம் சுமார் 103 டிகிரி முதல் 106 டிகிரி வரை இருந்தது. இந்த வெப்ப உயர்வுக்கு காரணம், ஈரோடு மாவட்டத்தில் வெட்டப்பட்ட 5 ஆயிரம் மரங்களேயாகும். எனவே, இனிவரும் காலங்களில் ஈரோடு மாவட்ட மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் நோக் கில் வெட்டப்பட்ட 5 ஆயிரம் மரங்களுக்கு பதிலாக 10 ஆயிரம் மரக் கன்றுகளை நெடுஞ்சாலைத் துறையி னர் நட்டு பராமரிக்க வேண்டும் என அதில் தெரி வித்துள்ளார்.