கே.ஜி டெனிம் - பேச்சுவார்த்தை தோல்வி
மேட்டுப்பாளையம், மே 28- பத்து நாட்களாக கே.ஜி.டெனிம் நிறுவன தொழிலா ளர்கள் சிஐடியு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், காத்திருப்புப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா, ஜடை யம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள கே.ஜி.டெனிம் தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக் கையை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் காத்திருப்புப் போராட்டம் 10 ஆவது நாளாக தொடர்கிறது. முன்னாதாக செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் வடக்கு கோட்டாட்சியர் தொழிலாளர் துணை ஆணையர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்க செயலாளர் சி.பத்ம நாபன், மாவட்ட துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், சிபிஎம் தாலுகா செயலாளர் கே.கனகராஜ், டெனிம் தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட வில்லை. ஆகவே போராட்டம் பத்தாவது நாளாக (புத னன்று) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மின்சாரம் தாக்கியதில் 3 பேர் படுகாயம்
நாமக்கல், மே 28- எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சட்டையம்புதூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி - காயத்ரி தம்பதிகளுக்கு, சௌந்தர் (19) என்ற மகனும், சந்தியா (17) என்ற மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த உமர் பாருக் என்பவரது மகள் ரெஜியா (17). இந்நிலையில், சௌந்தர், சந்தியா, ரெஜியா ஆகியோர், பாலாஜியின் வீட்டு மாடியில் செவ்வாயன்று இரவு பேசிக்கொண்டிருந்தனர். அப் போது, சௌந்தர் கையை தூக்கியபோது, எதிர்பாராத வித மாக மாடிக்கு அருகில் சென்று கொண்டிருத்த உயர் அழுத்த மின் கம்பியில் கைபட்டு, மின்சாரம் தாக்கியது. இவ்விபத்தில், சௌந்தருக்கு வலது மணிக்கட்டு எரிந்தும், கை, கால்க ளில் தீக்காயமும் ஏற்பட்டது. ரெஜியாவிற்கு இடது காது கருகியது. சந்தியா சற்று தொலைவில் இருந்ததால் இடது காலின் முட்டி, தொடை அருகில் லேசான தீக்காயம் ஏற் பட்டது. இதையடுத்து 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். தொடர்ந்து, 3 பேரும் மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலவச வீட்டுமனை கேட்டு மனு
கோபி, மே 28- கோபியில் இலவச வீட்டுமனை கேட்டு வட்டாச்சியரிடம் நஞ்சை புளியம்பட்டி மக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், கோபி பகுதியிலுள்ள நஞ்சைபுளி யம்பட்டி, மொடச்சூர், நல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக பலரும் வசித்து வரு கின்றனர். வீட்டுமனை இன்றி வாடகை வீட்டில் வசித்து வரு கின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் பல முகாம் களில் வீட்டுமனை வழங்க வேண்டி மனு அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, புத னன்று இலவச வீட்டுமனை வேண்டி வட்டாச்சியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா, விதொச தலைவர் வி.ஆர்.மாணிக்கம், பொருளாளர் அய்யாச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதியவரை அடித்து கொன்ற நபர் கைது
மேட்டுப்பாளையம், மே 28- மேட்டுப்பாளையத்தில் முதியவரை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற தோட்ட காவலாளியை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் சாலையில் கல்லாறு என்ற பகுதியில் அசோக் பார்ம் என்றழைக்கப்படும் பாக்கு தோப்பில் காவலா ளியாக பணி புரிந்து வருபவர் பழனிசாமி. இவர் தான் வேலை பார்க்கும் தோட்டத்தினுள் இரண்டு நபர்கள் நுழைந்து தன்னை மிரட்டி பணம் பிடுங்கியதோடு தாக்கினர் என்றும் திருப்பி தாக்கியதில் ஒருவர் இறந்து விட்டதாகவும் மற்றொரு வர் தப்பி சென்று விட்டதாகவும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் செவ்வாயன்று புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு இறந்து கிடந்த சுமார் ஏழுபது வயதுடைய முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தியதோடு காவல் நிலைய ஆய்வா ளர் சின்னகாமணன் தலைமையிலான போலீசார் தீவிர விசா ரணை நடத்தினர். அதில், திங்களன்று இரவு சுமார் பத்து மணியளவில் பழனி சாமி காவலுக்கு இருந்த தோட்ட பகுதிக்கு சுமார் ஏழுபது வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் வந்துள்ளதும் அவரி டம் யார் என்று பழனிசாமி கேட்க அவர் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த பழனிசாமி அவரை இரும்பு கம்பியால் தலையில் தாக்கியதில் அவர் இறந்ததும் தெரிய வந்தது. இதனை மறைக்க பழனிசாமி திருடர்கள் வந்து பணம் பிடுங்கியதாகவும் தாக்கியதாகவும் திருப்பி தாக்கியதில் ஒருவர் இறந்து விட்டதாக கூறியது பொய் என தெரிய வந் தது. இதனை பழனிசாமியும் ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்த மேட்டுப்பாளையம் காவல்துறை யினர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறை யில் அடைத்தனர். இறந்த முதியவர் கல்லாறு பகுதியில் பல மாதங்களாக யாசகம் கேட்டு வந்தவர் என்றும் இவரது ஊர் மற்றும் பெயர் தெரியாத நிலையில் இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் பெற்ற நில அளவையாளர் கைது
சேலம், மே 28- நிலம் அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ் சம் பெற்ற நில அளவையாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். சேலம், இரும்பாலை பிரதான சாலையில் உள்ள புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (48). இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 7000 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளவீடு செய்வதற்காக சூர மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளர் சங்கர் என்பவரை அணுகி யுள்ளார். அதற்கு, நிலத்தை அளவீடு செய்ய வேண்டுமெனில், ரூ.22 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என, கண்ணனிடம் தெரிவித்துள் ளார். மேலும், முன்பணமாக ரூ.5 ஆயிரம் தரும் படியும், பணத்தை சோளம்பள்ளம் பகுதியி லுள்ள பேக்கரி கடையில் வந்து பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கண்ணன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகாரளித்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய பணத்தை கண்ணன், சங்கரிடம் கொடுக்கும் போது, மறைந்திருந்த போலீசார் கையும், கள வுமாக பிடித்து சங்கரை கைது செய்தனர்.
சூறைக்காற்றுடன் பெய்த கனமழை ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்
கோவை, மே 28- பேரூர் சுற்றுவட்டார பகு திகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ஆயி ரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. குறிப் பாக பேரூர், தொண்டாமுத் தூர், ஆலந்துறை உள்ளிட்ட கிராமங்களில் திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்துவந்தது. இந்நிலையில் பேரூர் சுற்றுவட்டார பகுதி களில் செவ்வாயன்று இரவு சூரைக்காற்று டன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் பேரூர் அருகே உள்ள குப்பனூர் மற்றும் தீத்திபாளை யம் கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்ட ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்து சேதமானது. அறுவடைக்கு தயாரான வாழை மரங்கள் சூறைக் காற்றில் முறிந்து விழுந்த தால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், பேரூர் அருகே தீத்திபாளையம், குப்பனூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் இங்கு பயிரிடப்பட்ட ஆயிரக் கணக்கான வாழை மரங்கள் குலையுடன் சாய்ந்தது. பல ஏக்கரில் பரப்பளவில் பயிரி டப்பட்ட வாழை மரங்கள் அனைத்தும் அறுவ டைக்கு தயாரான நிலையில் இருந்தது. இத னால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ் டம் ஏற்பட்டுள்ளது. வங்கிக் கடன் வாங்கி விவ சாயம் செய்து வரும் நிலையில் தற்போது சூறைக்காற்றில் சாய்ந்த வாழையால், வாங் கிய கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தற்போது மழை பாதிப் புக்கு தமிழக அரசு வழங்கும் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை. உரிய நஷ்ட ஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.