கோவை:
கோவையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமைச் செயலாளர், தமிழகத்திற்கு கொரோனா பரவல் 3 சதவீதத்துக்கும் கீழே குறைந்து உள்ளது.
ஆனால் சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. நோய் பாதிப்பில் சென்னையை அடுத்து கோவை உள்ளது.ஒவ்வொரு பகுதிகளிலும் நோய் தொற்று பரவ தன்மைக்கேற்ப தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அரசு ஆய்வகங்களை விட தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோருக்கு பாதிப்பு அதிகம் காணப்படுவதால், பரிசோதனை விவரங்களை சேகரித்து அந்த பகுதியை சார்ந்தவர்களுக்கு நோய் தொற்று அதிக அளவில் உள்ளது என்பதை கண்டறிந்த மருத்துவ முகாம்கள், கட்டுப்பாடு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு முன்பு நோய் தொற்று பரவல் அதிகரிக்கவில்லை என்றால் அடுத்த கட்ட தளர்வை அறிவிக்க கூடும்.ஒவ்வொரு கட்ட தளர்வுகளில் போதும் நோய்த்தொற்று பரவல் குறித்து தீவிரமாககண்காணிக்கப்படுகிறது.தடுப்பூசி ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருவதால், விரைவில் பயன்பாட் டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமையில் தமிழகத்துக்கு பொதுமுடக்கம் தேவையில்லை. நோய்த்தொற்று பகுதிகளை கண்டறிந்து தனிமைப்படுத்தி, அப்பகுதி மக்கள் நடமாட்டத்தை குறைப்பதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.