இயற்கை மரண நிதியை உயர்த்திடுக
ஈரோடு, மே 25- நலவாரியத்தில் இயற்கை மரண நிதியினை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என சிஐடியு ஈரோடு மாவட்ட கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்ட சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்க 37 ஆவது மாவட்ட மாநாடு தோழர் டி.பி.முத்துசாமி நினை வகத்தில், தோழர் ஏ.கே.சீனிவாசன் நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற் றது. மாவட்டத் தலைவர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் எஸ்.மாதவன் வேலையறிக்கையை சமர் பித்தார். உழைக்கும் பெண்கள் மாவட்ட துணை அமைப்பளார் ஆர்.சரோஜா வாழ்த்தி பேசினார். இதில், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுத்து தட்டுப் பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். நலவாரியத்தில் இயற்கை மரண நிதி யினை ரூ.1 லட்சமாகவும், இதர அணைத்து பணப்பயன்களை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக என்.முருகையா, பொது செயலாளராக ஆர்.நடராஜ், பொருளா ளராக கே.பழனிசாமி, துணைத் தலை வர்களாக 5 பேர், துணைச் செயலா ளர்களாக 5 பேர் மற்றும் 16 பேர் உறுப்பி னர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிறைவாக ஏ.பி.மாதவன் நன்றி கூறி னார்.
பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சாலை சேதம்
தருமபுரி, மே 25- தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிக ளால் சேதமடைந்து காணப்படும் சாலை களை விரைந்து சீரமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத் தியுள்ளனர். தருமபுரி நகராட்சியில் மொத்த முள்ள 33 வார்டுகளில், ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கின்றனர். இங்குள்ள வீடுகள், கடை மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சனத்குமார் நதி யின் கால்வாய் மற்றும் ராமாக்காள் ஏரி யில் கலக்கின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு நகராட்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.32 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 19 வார்டுகளில் பாதாள சாக்கடை திட் டம் செயல்படுத்தப்பட்டது. பாதாள சாக் கடை திட்ட கழிவுநீரை ஒருங்கிணைத்து, மதிகோன்பாளையம் மற்றும் காந்தி பாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, 14 வார்டுகளில் 2 ஆம் கட்ட பாதாள சாக் கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலைகளில் பாதாள சாக் கடை திட்ட குழாய்கள் பதிக்க குழிகள் தோண்டப்பட்டது. குழாய் பதித்த பின்பு தோண்டப்பட்ட குழிகளை ஒழுங்காக மூடவில்லை. மேலும், தோண்டப்பட்ட மண்ணை சாலைகளிலேயே பல இடங் களில் விட்டுவிட்டனர். மேலும், குழாய் பதிக்கப்பட்ட சாலைகளை ஒழுங்காக சீரமைக்கா தால் குண்டும், குழியுமாக காட்சியளிக் கிறது. இதனால் நடந்து செல்வோர் மேடு பள்ளமான சாலைகளில் கீழே விழு கின்றனர். இருசக்கர வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றனர். சிறிது மழை பெய்தாலேயே சாலைகளில் பள்ள மான பகுதிகளில் மழை நீர் தேங்குகி றது. எனவே, பாதாள சாக்கடை திட் டப்பணிகளால் சேதமடைந்த சாலை களை, காலதாமதம் செய்யாமல் சிமென்ட் சாலையோ அல்லது தார்ச் சாலையோ அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.