tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா கல்வெட்டு திறப்பு

சேலம், டிச.22- சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முது பெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் நினைவு கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. தகைசால் தமிழர், இந் திய சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா நினைவு கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்றம் நிகழ்ச்சி சிபிஎம் சேலம் வடக்கு மாநகரக்குழு, சாமிநாதபுரம் கிளைகள் சார்பில் நடைபெற்றது. கட்சியின் ஏ கிளைச் செயலாளர் பி.ராஜேஷ்குமார் தலைமை வகித்தார். பி கிளைச் செயலாளர் வி.முருகானந்தம் வரவேற்றார். கல்வெட்டை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் திறந்து  வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செய லாளர் மேவை.சண்முகராஜா, வடக்கு மாந கரச் செயலாளர் என்.பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.