கோவை, ஜூன் 25- கோவை மாவட்டத்தில் ரூ.238.40 கோடி மதிப்பிலான திட் டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற் றும் புதிய திட்டப்பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச் சாமி வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ் வில் தமிழ்நாடு குடிநீர் வாரியத் தின் சார்பில் ரூ.166 கோடி மதிப் பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக ளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை சார்பில் ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் வாலாங்குளம் மேம் பாலத்தின் கீழ் மேம்பாடு செய்தல் பணி ரூ. 23.83 கோடி ரூபாய் மதிப் பீட்டில் புனரமைக்கப்பட்ட ஒருபகு தியினை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் உக்கடம் பகுதியில் ரூ.39.74 கோடி மதிப் பீட்டில் பேரூர் சாலையை ஒட்டி யுள்ள பெரியகுளத்தில் புனரமைக் கப்பட்ட குளக்கரையின் ஒரு பகுதி யினை பொதுமக்கள் பயன்பாட் டுக்கு காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் ரூ. 2.85 கோடி மதிப்பீட்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய கட் டிடம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறையின் சார்பில் ரூ. 2.70 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் புதிய கட்டிடம், மக் கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் செட்டிபாளை யம் அரசு ஆரம்ப சுகாதார மைய கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழ னிச்சாமி தலைமையில் உள்ளாட் சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலு மணி, மாவட்ட ஆட்சியர் கு. இராசா மணி மற்றும் சுகாதாரத் துறை அதி காரிகள் பங்கேற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொழில்துறையினருடனான சந் திப்பு நடைபெற்றது.