tamilnadu

மேட்டூர் அணையில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு '

பசுந்தேயிலையை வேளாண் அமைச்சகத்தின் கீழ்  கொண்டுவர விவசாயிகள் வலியுறுத்தல்

உதகை, ஜூன் 24 – நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற  கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் மீண் டும் குரல் எழுப்பியுள்ளன. தேயிலை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், போராட் டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் உதகையில் நடைபெற்றது. நீலகிரியில் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை, வலியுறுத்தி ஏற்கெ னவே பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட நிர் வாகம் கூறியதின் பேரில் இந்தப் போராட்டங்கள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவொரு கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என விவசாயி கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உதகையை அடுத்த பாலகொலா  ஊராட்சிக்குட்பட்ட தங்காடு கிராமத்தில் செவ்வாயன்று தேயிலை விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம், தங்காடு  ஊர் தலைவர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. இதில், கடந்த அக்டோபர் மாதத்திற்கான தேயிலை வாரி யம் நிர்ணயித்த விலையை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். ஏல மையத்தில் குறைந்தபட்ச விலை:  தேயிலைத் தூள் ஏல மையத்தில் குறைந்தபட்ச ஏலத்  தொகையாக ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் என நிர்ணயம்  செய்ய வேண்டும். கடந்த ஐந்து மாதங்களாக தேயிலை  வாரியம் நிர்ணயித்த மாதாந்திர விலையை அனைத்து  கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளும் நிலுவையின்றி உட னடியாக வழங்க வேண்டும். தேயிலை விவசாயிகளின் நீண்ட காலக் கோரிக்கையான, பசுந்தேயிலை சாகுபடியை மத்திய  மற்றும் மாநில அரசுகள் வேளாண் அமைச்சகத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கேட்டு மாபெரும் அடை யாளப் போராட்டத்தை அனைத்துத் தரப்பு ஆதரவுடன்  நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

ஜூலை 1 முதல் ஆன்லைன் உணவு டெலிவரி இல்லை! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

நாமக்கல், ஜூன் 24- உணவகங்களில் இருந்து வாங்கி, ஆன்லைன் வழியே உணவு விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்கள், உணக  உரிமையாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையை கொடுக்க வில்லையெனில், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் நிறுவ னங்களுக்கு உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும், என  ஹோட்டல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளார். நாமக்கல்லில் நகர மற்றும் தாலுகா ஹோட்டல், பேக்கரி  உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம், சேலம் சாலையிலுள்ள குமரன் ஹோட்டலில் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், உணவகங்களிலிருந்து உண வுப் பொருட்களை வாங்கி ஆன்லைன் வழியாக விற்பனை  செய்யும் பெரும் நிறுவனங்கள், விளம்பரம் உள்ளிட்ட பல் வேறு மறைமுக கட்டணங்களை அந்த ஹோட்டல் உரிமை யாளர்களிடம் வசூலித்து வருகின்றன. இதனால் ஹோட்டல்  தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, உணவு விற் பனைக்கான தொகையை, உரிய காலத்தில் வழங்க வேண் டும், என வலியுறுத்தப்பட்டது. இதன்பின் சங்கத்தின் தலைவர்  ராம்குமார், செயலாளர் அருள்குமரன் ஆகியோர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ஆன்லைன் உணவு டெலிவரி நிறு வனங்களான ஜூமாட்டோ (zomota), ஸ்விக்கி (Swiggy) ஆகிய பெரு நிறுவனங்கள், ஒவ்வொரு கடையிலும் ஒவ் வொரு மாதிரி கமிஷன் பெறுகின்றன. நாமக்கல் தாலுகா வில் மட்டும் 85 கடைகள், ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டு  வருகின்றன. இதனால் தினமும் ரூ.10 லட்சம் மதிப்பில் ஆன் லைனில் உணவு பொருள் வியாபாரம் நடைபெறுகிறது. ஒவ் வொரு கடைக்கும், ஒவ்வொரு விதமான கமிஷன் வித்தியா சம் இருக்கிறது. மேலும், ஒரு வாரம் கழித்து தான் கடை  உரிமையாளருக்கு பணம் வருவதால், ஹோட்டல் உரிமையா ளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இந்த  பெரு நிறுவனங்கள் இதுகுறித்து நாமக்கல் நகர மற்றும்  தாலுகா ஹோட்டல் உரிமையாளர்களாகிய எங்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். உணவக உரிமையாளர் களுக்கு கட்டுபடியாகும் விலையை கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அந்த நிறு வனங்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய் வது நிறுத்தப்படும், என்றனர்.

மேட்டூர் அணையில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆய்வு '

சேலம், ஜூன் 24- மேட்டூர் அணையின் 16 கண் மதகு பாலம் பகுதியில் நடை பெற்றுவரும் பராமரிப்புப் பணிகள் குறித்து, சென்னை ஐஐடி.  கட்டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி ஆய்வு  மேற்கொண்டார். சேலம் மாவட்டம், மேட்டூர் அணை அதன் முழு கொள்ளள வான 120 அடியை எட்டும் போது, 16 கண் மதகு பாலம்  வழியாக உபரிநீர் திறக்கப்படும். இதன் மூலம் 30 டி.எம்.சி.  வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்நிலையில், ரூ.19  கோடி மதிப்பில் 16 கண் மதகு பாலத்தின் தூண்கள் மற்றும்  வளைவுகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து செவ்வாயன்று சென்னை ஐஐடியின் கட் டடவியல் துறை பேராசிரியர் அழகு சுந்தரமூர்த்தி, நீர்வளத் துறை அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேதமடைந்த கான்கிரீட் பூச்சுகளை அகற்றிவிட்டு, மைக்ரோ கான்கிரீட் பூசப் பட்டு தூண்கள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மைக்ரோ கான்கிரீட் பூசுவதன் மூலம் 50 முதல் 100 ஆண்டு கள் வரை தூண்கள் பலமாக இருக்கும். 16 கண் மதகு பகுதி யில் நடைபெற்று வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அதன்  அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும், என்றார். இந்த ஆய் வின்போது சேலம் மேல் காவிரி வடிநிலவட்ட கண் காணிப்பு பொறியாளர் சிவகுமார், அணை நிர்வாக பொறியா ளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ்,  உதவிப் பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்த னர்.