கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து
மேட்டுப்பாளையம், ஜூன் 13- பில்லூர் அணைப்பகுதியில் வனத் துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா, கனமழை எச்சரிக்கை எதிரொலியின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் பவானியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியான பரளிக்காடு என் னுமிடத்தில் மலை முகடுகளின் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வரு கிறது. வனத்துறை சார்பில் நடத்தப் படும் இந்த சூழல் சுற்றுலாவில் பங் கேற்க தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற் றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் மற்றும் பண்டிகை கால விடு முறை நாட்களில் நடத்தப்பட்டு வரும் இந்த சூழல் சுற்றுலா, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. இதனால் வரும் சனி மற்றும் ஞாயிறன்று நடைபெறும் சூழல் சுற் றுலா ரத்து செய்யப்படுவதாக வனத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.