tamilnadu

img

கோவையில் அதிகாலை முதலே சாரல் மழை

கோவையில் அதிகாலை முதலே சாரல் மழை

கோவை, ஜூன் 23- கோவையில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளது என்று  வானிலை ஆய்வாளர் தெரிவித்திருந்த நிலையில், திங்க ளன்று அதிகாலை முதலே சாரல் மழை பெய்து வரு கிறது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயி லின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கோவை மாந கர் மற்றும் புறநகர் பகுதிகளில் திங்களன்று அதிகாலை முதல்  சாரல் மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல் லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற் றும் வியாபாரிகள் ரெயின் கோட் அணிந்தும் குடையை பிடித் துக் கொண்டும் சென்றனர். மேலும் அரசு மருத்துவமனை யில் நீர் தேங்கியதால் தூய்மைப் பணியாளர்கள் உடனடி யாக மழை நீரை அப்புறப்படுத்தினார்கள். தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து தொண்டா முத்தூர், மாதம்பட்டி, ஆலாந்துறை, பேரூர் உள்ளிட்ட நகரை ஒட்டி உள்ள பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் விவ சாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கி உள்ளனர். இது குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், திங்களன்று முதல் நான்கு நாட்களுக்கு தென்மேற்கு பருவ  மழை பெய்யும். மிக கனமழை பெய்ய வாய்ப்பில்லை. மேலும்  பாலக்காடு - கணுவாய், கோவை மேற்கு பகுதிகளில் மித மான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பாலக்காடு - கணு வாய், பொள்ளாச்சி - கோவை சாலையில் மேற்கே அடுத்த  நான்கு நாட்களுக்கு சற்று கனமான மழைக்கு வாய்ப்பு உள் ளது. ஒரு சில இடங்களில் மட்டும் அவிநாசி சாலை, வடக்கே  மிதமான வெப்ப சலனம் காரணமாக மழைக்கு  வாய்ப்பு உள்ளது எனத்தெரிவித்தனர்.