சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் 4 தங்கக் கட்டிகளுடன் சுமார் ரூ.63 லட்சம் மதிப்பிலான தங்கத்தைக் கடத்தி வந்த நபரிடம் மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்திற்குச் சிங்கப்பூரிலிருந்து தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த ஸ்கூட் விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணி ஒருவர் 4 தங்கக் கட்டிகள், நகைகள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. விசாரணையில் பயணியிடம் சுமார் ரூ.63.24 லட்சம் மதிப்பிலான 854 கிராம் தங்கம் இருந்தது, அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.