tamilnadu

img

கோவை விமானநிலையத்தில் இரு பயணிகளிடமிருந்து தங்கம் பறிமுதல் 

விமானம் மூலம் கோவை வந்த இரு பயணிகளிடமிருந்து ரூ.26 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமான மூலம் கோவை விமான நிலையத்திற்கு இர்பான் மற்றும் முஹம்மது யாசீர் ஆகிய இருவர் வந்துள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களிடம் சோதனை செய்தனர்.  அப்போது இர்பான் என்ற பயணியை சோதனை போது , மலக்குடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட ரூ.13  லட்சம்  மதிப்புள்ள 300 கிராம் தங்க கட்டியை பறிமுதல் செய்தனர். 

அதேபோல், முஹம்மது யாசீர் என்ற பயணியும் மலக்குடலில் மறைத்து கொண்டு வந்த 300 கிராம் தங்கமும் சிக்கியது. பேஸ்ட் வடிவிலான  தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், தங்க கட்டியை மறைத்து எடுத்து வந்த பயணியை கைது செய்தனர்.
 

;