பாறைக்குழியில் மூட்டை மூட்டையாக கழிவுகள்
பொள்ளாச்சி, ஜூன் 9- பொள்ளாச்சி அருகே கானியா லம்பாளையம் கிராமத்தில் தனி யார் தோட்டத்தில் இருந்த பாறைக் குழியில் மூட்டை மூட்டையாக கழிவு கள் கொட்டபடுவதால், அப்பகுதி யில் துர்நாற்றம் வீசுவதோடு ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ள னர். பொள்ளாச்சி அருகே உள்ள கக் கடவு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்தில் இருந்து காணியாலம் பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பாலு என்பவருக்கு சொந்தமான விவசாயத் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பயன் படுத்தப்படாத பாறைக்குழி உள்ளது. கடந்த சில தினங்களாக அந்த குழி யில் மூட்டை மூட்டையாக கழிவு பொருட்களை நிரப்பி உள்ளனர். இதி லிருந்து அதிக துர்நாற்றம் வீசுவ தோடு அப்பகுதியில் ஈக்கள் தொல்லை அதிகளவு உள்ளது. இதனையடுத்து திங்களன்று கழிவு கள் கொட்டப்பட்ட பாறைக்குழியை ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை கொண்டு தோட்டத்து உரிமையாளர் மூட முற்பட்டபோது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தி னர். பின்னர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மூட்டை களில் கொட்டப்பட்ட கழிவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், கக்கடவு ஊராட்சிக்குட் பட்ட காணியாலாம் பாளையம், வகுத்தம்பாளையம், வலசு பாளை யம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. கடந்த சில தினங்களாக பாறைக்குழியில் மூட்டை மூட்டை யாக கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதோடு ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் கிணறுகளில் தண்ணீரில் நிறம் மாறி வருவதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு முழுமையாக கொட் டப்பட்ட கழிவுகளை எடுத்து ஆய்வு நடத்த வேண்டும் என்று பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.