மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான முதலாவது பூங்கா கோவையில் திறப்பு
தமிழ்நாட்டில் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட ‘நம்ம சிறப்பு பூங்கா’, கோவையில் திங்களன்று திறக்கப்பட்டது. கோவை, காளப்பட்டி அருகே யுள்ள நேத்ரா நகர் பகுதியில், கோவை மாநகராட்சி மற்றும் பல தன் னார்வ அமைப்புகள் இணைந்து இந்த பூங்காவை உருவாக்கியுள் ளனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி யர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பூங்கா வைத் திறந்து வைத்தனர். அதை யடுத்து சிறப்பு திறன் கொண்ட குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். ‘நம்ம சிறப்பு பூங்கா’ என பெயரி டப்பட்டுள்ள இந்த பூங்கா, முழுமை யாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்டவர்க ளின் வசதிக்கேற்ப வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் சக்கர நாற்காலி யில் பயணிக்கும்போதே முழு பூங்கா வையும் சுலபமாக பார்வையிட முடி யும் வகையில் மேடு பள்ளங்கள், படிக்கட்டுகள் இல்லாமல் சீராக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறுவப்பட்டுள்ள விளை யாட்டு சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட் டுள்ளதோடு, சிறப்பு திறன் கொண்ட குழந்தைகள் தங்கள் திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பாகக் கவனிக்க பராமரிப்பாளர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர். வாரத்தின் ஒவ்வொரு திங்கட் கிழமையும் பூங்காவிற்கு விடுமுறை. மற்ற நாட்களில், வேலைக்கு செல் கின்ற பெற்றோர் தங்கள் மாற்றுத் திறனாளி அல்லது சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளை இங்கு விட்டுச் செல்லலாம்.