tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நூதன மோசடி

கோவை, ஏப்.4– கோவை மாவட்டம், கே.ஜி. சாவடியை சேர்ந்த பெண் ஒருவர், இந்து அற நிலைத் துறையில் அரசு வேலை வாங்கித்தருவதாக சொன்ன சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த கோபி சங் கர் (42) என்பவரிடம் ரூ. 5,40,000 பணம் கொடுத்து உள்ளார். பின்பு கோபி சங்கரை தொடர்பு கொண்ட போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த  அந்தப் பெண் மாவட்ட குற் றப்பிரிவில் புகாரளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு  செய்யப்பட்டு கோபிசங்கரை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

அணை நிலவரம் சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160அடி நீர்வரத்து:9.96கனஅடி நீர்திறப்பு:9.96கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:49.85/72அடி நீர்வரத்து:69கனஅடி நீர்திறப்பு:1135கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:64.30/120அடி நீர்வரத்து:351கனஅடி நீர்திறப்பு:430கனஅடி

தோட்டத்தில் குட்டிகளுடன் புகுந்த யானைகள்

தடாகம் அருகே மூன்று குட்டிகளுடன் யானைக்கூட்டம் விவசாயி ஒருவரின் தோட் டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி யுள்ளது. தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி, விவசாயிகளின் பயிர் களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலை யில், வியாழனன்று இரவு தடாகம் மாரியம் மன் கோவில் அருகே உள்ள வடக்கு வாத்தி யார் தோட்டத்திற்குள் 3 குட்டிகளுடன் கூடிய யானைக் கூட்டம் புகுந்து, மாட்டுத் தீவனத்திற் காக பயிரிடப்பட்டிருந்த கம்பு, நேப்பியர் புற் கள் மற்றும் பிற விளைநிலங்களை மேய்ந்து சேதப்படுத்தியது. இதை அறிந்த வனத்துறை  அதிகாரிகள் உடனடியாக வந்து, டார்ச் விளக் குகள் மற்றும் ஒலி எழுப்பி யானைகளை வனப்பகுதிக்குத் துரத்தியடித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், யானை கள் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் போதே தடுத்து, மீண்டும் வனத்திற்குள் விரட்ட வேண்டும். யானைகளின் நடமாட் டத்தை கண்காணிக்க கூடுதல் பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் தேவை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப் பீடு வழங்கப்பட வேண்டும் என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை  விடுத்தனர்.

வழிப்பறி: கைது

கோவை, ஏப்.4– கோவை மாவட்டம், சூலூர் காமாட்சி தேவர் லேஅவுட் பகுதியைச் சேர்ந் தவர் தேவிகா (67).  இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பேத்தியுடன் காய்கறி கடைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண் டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரி யாத நபர்கள், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங் கிலியை பறிக்க முயன்றனர். தேவிகா சங்கிலியை இறுகப் பிடித்ததால், ஒரு சிறு பகுதி மட்டுமே பறிக்கப்பட்டது. இதில் அவர் கீழே விழுந்து காயமடைந்தார். முதலுதவி பெற்ற பின்னர், அவர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் தனிப் படை அமைத்து, அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய் தனர். அதில் சூலூர் அரசு மருத்துவமனையில் விபத் தில் சிக்கி இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இவர் களே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதை காவல் துறையினர் உறுதி செய்த னர். தொடர்ந்து வழிப்பறி யில் ஈடுபட்ட முபாரக் அலி (33), பிரதீப் குமார் (23) ஆகி யோரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.

ஏற்காடு மலைப்பாதையில் ரப்பர் ரோலர் தடுப்புகள்

நடப்பாண்டு கோடை விழாவை முன்னிட்டு, ஏற்காடு மலைப்பாதையில் விபத்தை தடுக்க 20 ஆபத்தான வளை வுகளில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு பல் வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற் றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காடு மலைப்பாதையில் 20 கொண்டை  ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வளை வுகளில் வாகனங்கள் திரும்பும்போது சில நேரங்களில் ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. கடந்தாண்டு ஏப்ரலில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்று 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மாதத்திற்கு இரண்டு, மூன்று விபத்துக்கள் ஏற்படு கிறது. ஆண்டுக்கு சராசரியாக 50க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கிறது. இந்த  விபத்துக்களில் அதிகமாக சிக்குவது இருசக்கர வாகனங்கள் தான். மலைப் பாதையில் விபத்தை குறைக்கும் வகை யில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதுபோன்ற ரப்பர் ரோலர் தடுப்புகள் உதகை, கொடைக்கானல் உட்பட பல மலை ஸ்தலங்களில் அமைக்கப்பட்டுள் ளது. ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக் கப்பட்ட இடங்களில் விபத்துக்கள் கணி சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக் கது. அதுபோன்று ஏற்காடு மலைப் பாதையில் விபத்தை குறைக்கும் வகை யில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக் கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது. கடந்த ஐந்து மாதமாக ஏற்காடு  மலைப்பாதையில் ஆபத்தான வளைவு, அதிக விபத்து நடக்கும் இடங்களை கண் டறிந்து 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,  ஏற்காடு சுற்றுலாத் தலத்திற்கு நாள்  ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  சுற்றுலாப் பயணிகள், பண்டிகை காலங் களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். ஏற்காடு மலைப் பாதையை பொருத்தமட்டில் 20  கொண்டை ஊசி வளைவு மற்றும் ஏரா ளமான வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில் எதிர்பாராதவிதமாக சில வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள் கின்றன. சில நேரங்களில் வேகமாகவோ அல்லது கவனக்குறைவால் வளை வில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கிறது. இந்நிலையில், வரும் மே  மாதத்தில் ஏற்காட்டில் கோடை விழா  நடக்கவுள்ளது. இந்த கோடை விழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வர வாய்ப்புள்ளது. மலைப்பாதையில் விபத்தை தடுக்கும் வகையில், ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள் ளது. மொத்தம் 20 இடங்களில் ரப்பர் ரோலர் தடுப்புகள் அமைக்கப்பட்டுள் ளது. இந்த ரப்பர் ரோலர் தடுப்பா னது, வளைவில் வாகனம் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக சாயும் நிலை ஏற்பட்டால், வேகத்தை குறைக் கும். ரப்பர் ரோலர் அந்த வாகனத்தை சாய்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளும். ரப்பர் ரோலர் தடுப்பு மூலம் 90 சதவீதம் விபத்துகளை குறைத்துவிடலாம், என் றனர்.